Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Tuesday, February 8, 2011

பாரதியார் பாடல்கள்

 ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா

இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியி னால் விளக்குவாய் வா வா வா

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா

Post Comment

Monday, February 7, 2011

தோப்புக்கரண உடற்பயிற்சியை

 
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் (Pranic) சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
 
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள்.
 
அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?
Thank You  puthiyaulakam.com

Post Comment

How to Turn Yourself Into a Super Brain With Super Brain Yoga

 Want to improve your intelligence or even turn your kids into super-humans and fed with scholarships after scholarships? Here's a simple answer to your prayer...
Super Brain Yoga is one of most effective techniques of improving brain power. It's so simple to do and yet its quick effectiveness has been nothing short of amazing.
This simple technique can be explained as follows:
While standing, hold our right ear with our left hand, with thumb touching front side and forefinger touching back side of the ear. 
Then place our right hand on our left ear in the same fashion. With our hands positioned correctly as such, then we're ready to do the exercise part where we will do squatting or normal sit-up exercise. When going down, we need to inhale deeply with stomach/abdomen and while getting up, we need to exhale slowly. The process of inhalation /exhalation should be covered within the time of going down and getting up.
Actually there are 2 versions of breathing:
1. Inhaling while squatting and exhaling as you stand.
2. Exhaling while squatting and inhaling as you stand.
There's a video you can watch to help you better understand this simple and yet powerful system.
In Yoga tradition, when the body bends forward we exhale(breathe out) and when the body stretches out we inhale(breathe in. Therefore, when we squat holding our ears with opposite hands, (our body bends forward)we exhale and upon standing back up, our body stretches,and therefore we inhale.
This exercise has been credited with scientific validation for its beneficial effect of attaining holistic whole brain (left and right brain) synchronization. This complete movement has to be performed slowly. Also make sure that the eyes remain straight during the process for maximum benefits.
Inhalation and exhalation can be done according to one's comfort level, without causing pain nor uneasiness. The main concern is to carry out the inhalation and exhalation properly, that's all there's to it. A count of 14 to 21 repetitions per day is more than enough and improvement can be seen in 3 to 4 weeks easily.
Some important precautions to be followed are:

1. Make sure to wear loose garments and be dressed comfortably while performing the exercise.
2. Women are not advised to do the exercise during periods, as it is believed that "contaminated energy" residing on lower body may go up. Pregnant women are advised to consult their physician before attempting to perform this exercise on a daily basis.
3. The best time to do this exercise is in early morning or later in the evening.
4. Better effect will be obtained when this is done on empty stomach.
5. Make sure the exercise is performed slowly for better results.
Believe me, such a simple exercise can not only enhance your intelligence and make you mentally fit, but also help you drop some extra pounds and be physically fit too, let alone eliminating the likelihood of contracting age-related diseases such as Parkinson's, etc. That's more than killing 2 birds with one stone, so to speak.
Thank You  ezinearticles

Post Comment

Tuesday, February 1, 2011

Optical Illusion That Creates Hallucination

Optical Illusion That Creates Hallucination








The first time I saw these optical Pictures I thought they were moving but they are not, if you look at them closely they are drawn perfectly that it creates an illusion that looks like they’re moving in circles. In fact these pictures are built from an Optical Imagery graphics making our eyes and mind confuse that creates a continuous motion out of the steady object.

Post Comment

Challenge Your Common Sense

Let's use our imagination to change outdated ways of thinking
You may think it's normal to see cars on the road all the time. Subsequently, you may feel strange if there are no cars on the road. If we want to change "the normal way," we will need a lot of power and imagination. Here we discuss an example of how a city successfully changed what they thought was "normal." This story is about the people in Aarhus, the second largest city in Denmark, and how they changed their thinking about cars.

Aarhus is a port city with a population of about 400,000. Most people live within 10 kilometers of the city center. For a long time, people in Aarhus depended on automobiles as their main form of transport, and the city was developed to make it easy for drivers to get around the city. Automobiles had priority on the road, and pedestrians had to walk while trying to avoid cars, just like we do now in Japan.
But in 1993, all this changed. Aarhus mapped out an innovative plan that gave high priority to bicycles on the road. According to the plan, the city:
1) started keeping automobiles out of the city center and prohibited parking on roads in the city center;
2) allowed bicycles to travel on the car-free roads and provided parking lots for bicycles in many places around the city;
3) made lanes inside the cycling paths for pedestrians only; and
4) restored a canal for ferries to carry people.
Within three years of the new plan being realized, Aarhus had been reborn as a "Bicycle City."
Usually, when any big change is suggested, people tend to feel threatened by it and show a lot of objection. The people in Aarhus were no exception. For example, the shop owners in town were afraid that getting rid of cars would cause them to lose their shoppers and their businesses.
So to warm people up to the idea, the city planners in Aarhus published their detailed plans in local newspapers and delivered handouts. They also collected public opinions and comments about their plan, and reviewed them carefully. They revised their plans many times, according to the citizens' ideas. Thanks to these persistent efforts by the city planners to reach an agreement favored by all citizens, Aarhus City succeeded in making the planned changes.

The city also conducted a promotional campaign supporting bicycle riders, proclaiming that a bicycle is an environmentally friendly transport tool. Since then, the proportion of bicycle commuters rose from less than 10 to 60 percent. Also, surprisingly but happily, all the city's shops' sales increased more after the switch, as more customers visited the old shops in town. The revived town became lively again. And as hoped, the city is now free of air pollution caused by exhaust fumes and carbon dioxide, and there is no traffic noise!
A town is made for people by people. It is the people themselves who can change their own town into a people-friendly and eco-friendly wonderful place.

Post Comment

Friday, January 28, 2011

ஒரு சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே


குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்என்பர்.  இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள்இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.  தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்னஇதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும்….  இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.
தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.
பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மை, தாம் முதலில் உணர வேண்டும். ஆசிரியசேவை மனதால் உணரப்பட வேண்டியது. ஏதோ விடுமுறைகள் நிறைந்த இலகுவான தொழில் என்று எண்ணாமல் தியாக உணர்வுடன் செய்யப்பட வேண்டிய சேவை என்பதை புரிந்து கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்களான நாம் எப்போதும் எம்மை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். மாற்றமே ஆசிரியரின் செயற்பாட்டு ரீதியான அடிப்படை வளர்ச்சியாகும். நாம் எதை செயற்படுத்த விரும்புகிறோமோ அதை முதலில் நாம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டும்.
ஆசிரியர்களின் வார்த்தைகளையும், வர்ணிப்புகளையும் மாணவர்கள் கவனிப்பதை விட அவர்களின் நடத்தை, முக பாவம் என்பவற்றையே மாணவர்கள் முழுமையாக கிரகிக்கிறார்கள்.
ஆசிரியரின் நடத்தை தான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் 80% ஆசிரியர்களின் நடத்தை, செயற்பாட்டில் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்ல கல்வி சிறந்த பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், சமூக தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டும். இங்கே ஆசான் பல்துறை வல்லுவனாக இருத்தல் அவசியம். அப்போது தான் மாணவர்களுக்கு எம் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.
வெற்றிகரமான ஆசிரியர் எனப்படுபவர், சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறையில் சிறந்த குடும்பப் பின்னணியையும் சிறந்த உள நிலையையும் கொண்ட மாணவனுக்கு கற்பித்து அம் மாணவனை முன்னேற்றுவதல்ல. மாறாக தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பற்றி சகல விடயங்களையும் அறிந்து, பொருத்தமற்ற சுழலில், கல்வியறிவு குறைந்த பின்னணியில் இருந்து வரும் மாணவனை வளப்படுத்துவதே வினைத்திறன் மிகு ஆசிரியருக்கு வேண்டியது. இதுவே ஓர் ஆசானின் வெற்றியும், பெருமையுமாகும்.
நவீன காலத்தில் ஆசிரியர் தொழில் பணத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறிப்பாக இக்கால கட்டத்தில் பணத்தை மையமாகக் கொண்டு கல்வி விலைபேசப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் பெரும் சாபக்கேட்டை உருவாக்கலாம். பணத்தை சேகரிப் பதற்கான கல்வியை மட்டும் வழங்காது நல்ல பண்பாட்டு ரீதியான, ஒழுக்க விழுமியங்களை நிலை நாட்டும் நிறை கல்வியை ஆசிரியர்கள் வழங்குவது காலத்தின் தேவையாகும்.
ஆசிரியர் தொழில் புனிதத்துவம் மிக்கவை. தெய்வீகமானவை. எனவே, இத்தொழில் மகத்மீகத்தை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். ஏற்னகவே குறிப்பிட்டதைப்போல் ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி விசமாகஆசிரியர்கள் மாறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தினத்தில் இது குறித்து திடசங்கற்பம் பூணுவோமாக!

Post Comment

Thursday, January 27, 2011

ஆசிரியத்துவத்தின் வகிபங்கும், மாணவர்களின் உள நெருக்கீடும்



If you have a lemon, Make a Lemonade” என்பது மொழி. அதாவது தங்களிடம் ஓர் எழுமிச்சம் பழம் இருப்பினும் அதிலிருந்து எழுமிச்சம்சாறு செய்யலாம் எனும் நம்பிக்கை, அவ்வாறு தொடங்கினால்தான் பின்னர் தோடம்பழச்சாறு பற்றியோ அல்லது பெரிய தொழிற்சாலை பற்றியோ சிந்திக்க முடியும் என்பது பொருள்.
இவ்வாறுதான் ஒவ்வொரு மாணவனின் கற்றவும் நம்பிக்கை சார்ந்தே அடித்தளமிடப்படுகின்றது. இந்த வகையில் இன்றைய நிலையில் பாடசாலைகள், பத்திரிகைகள், கல்வியியல் அமைப்புக்கள், நிறுவனங்கள், சஞ்சிகைகள், போன்றன இதற்கான உந்துதல்களையும், உறுதுனையையும், பலமான நம்பிக்கையினையும் வழங்குவதில் பாரிய முயற்சி காட்டி வருகின்றது.
உலக மாற்றங்களுக்கு ஏற்ப இயைந்து கொடுக்கக் கூடிய வகையில் கற்றல் - கற்பித்தலில் புதுப்புது திறன் விருத்திகள், கல்வியியல் முறையில் விசேட சீர்திருத்தங்கள் போன்றன உள்வாங்கப்பட்டு இயக்கத்திறன், ஆக்கத்திறன் அதிகரித்து வருகின்றமை நோக்கியறியத்தக்கது.
“இன்றைய சிறார்கள் நாளைய தலைமைகள்” என்ற ரீதியில் மாணவர் சமூதாயத்திளை கல்வி அறிவில் முன்னேற்றுதல் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆளுமையும் திறனும் கொண்டவர்களாக உருவாக்குதல், அவர்களை முழு மனிதனாக்குதல் பணிகளில் பாடசாலையானது மிகப் பெரிய வகியங்கினைக் காத்து வருகின்றது.
ஒருவனை மனிதப்பண்பாடுடையவனாக மாற்றும் வகையில் கல்வியானது “குழந்தைகளிடம் இருந்து முழு மனிதனை வெளிக் கொணர்ந்து திறன் விருத்தியின் ஆளுமையை வளர்க்கின்றது. இங்கு உடல், உள, அறிவு, ஆண்மா என்பன ஒன்றினைந்து விருத்தி செய்யப்பட்டு வெற்றி கொள்ளப்படுகின்றது”. இதனால் கல்வி சிறந்த உளத்துணையுடையதாகவும் காணப்பட வேண்டியுள்ளது.

ஆசிரியர்களின் வகிபங்கு : சமூக நிறுவனங்களில் ஒன்றாகக் காணப்படும் பாடசாலையின் வகுப்பறையிலிருந்தே நற்பிறஜைகள் என்ற அந்தஸ்தினையுடையவர்களாக வளர்த்தெடுக்கப்படுகின்றனர் வகுப்பறையில் ஆசிரியர் எவ்வாறு கற்றல் கற்பித்தலினை முன்னெடுக்கின்றனர் என்பதிலேயே ஆசிரியரின் வெற்றி தங்கியுள்ளது.
“குழந்தையானது கேள்வி கேற்கும் போதுதான் மனிதன் தனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கின்றது என்பதனை உணருகின்றனர்” என Michael Block Fort என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார் அதாவது இன்றைய நிலையில் பிள்ளைகள் பல்வேறு கோணங்களில் திறன்படைத்தவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கு ஏற்றவகையில் முகங்கொடுக்கக் கூடியவர்களாக ஆசிரியர் சமூகம் தயார் படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை வெற்றி கொள்வது என்பது ஓர் இலகுவான காரியம் எனக்கூறிவிட முடியாதுள்ளது. ஓவ்வொருவரின் சிந்தனையும், செயற்பாடும், தொனியும் வெவ்வேறு குடும்பச் சூழலிலிருந்து வரும் வகையில் பரந்து பட்டதாகக் காணப்படுகின்றது.
அதாவது தரம் 1ற்குள் நுழையும் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் காலடி எடுத்துவைக்கின்றனர். சிலமாணவர்கள் இயல்பூக்கம் கொண்டவர்களாகவும், சிலர் சாதாரன நிலையில் உள்ளவராகவும், மேலும் சிலர் கூச்ச சுபாவம், அதீத அமைதி, குரும்புத்தனம், அழுகை போன்ற பல மனப்பாங்குடன் காணப்படுவர். இந்நிலையில் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அவரவர் நடத்தைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அணுகி சமநிலைப்படுத்தும் திறன் ஆசிரியரிலேயே தங்கியுள்ளது.
இன்றைய நிலையில் கல்வியில் அறிவிலி, முட்டாள், என்ற சொல் வாசகம் அகற்றப்பட்டு விட்டது அதாவது ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு வகையில் விகித அடிப்படையில் திறமை கொண்டவர்களாகக் காணப்படுவர். அவ்வகையில் சீறிய வழியில் வளர்த்தெடுப்பது ஆசிரியத்துவத்தின் முக்கியபணியாகவுள்ளது. மாணவர்களின் நிலை கருதி அவர்கள் 3 நிலைகளாக வகைபடுத்தப்படுகின்றனர்.
1. மீதிறன் கொண்டமாணவன் (Gifted Child)
2. சாதாரனமானவன் (Normal Child)
3. மெல்லக்கற்கும் மாணவன் (Back Ward Child)
வகுப்பறையில் இவ் 3 விதமான மாணவர்களும் காணப்படுவர் இம் மூவினருக்கும் வெவ்வேறுவிதமான கற்பித்தல் அணுகுமுறை என்பது வித்தியாசப்பட்டுக் காணப்படவேண்டும்.
எடுத்துக்காட்டாக – ஆசிரியர் ஓர் பாடத்தினை விளங்கப்படுத்திய பின்னர் அது தொடர்பான பயிற்சியோ, விளக்கமோ கரும்பலகையில் எழுதி முடிக்கும் முன்னே மீதிறன் கொண்ட மாணவன் எழுதிமுடித்துவிடுகின்றான். ஆனால் அதே வகுப்பறையிலுள்ள மெல்லக் கற்கும் மாணவன் பாடம் முடிவடைந்த வேளையிலும் கூட ஒரு சொல்லோடு மாத்திரமே இருந்து விடும் நிலையும் காணப்படுகின்றது. இங்கு இவ்விரு வகுப்பாரும் விசேட தேவையுடைய மாணவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே இவ்விரு சாராரினதும் நிலைகுறித்து கவனித்துச் செயற்படுவதென்பது ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. இது சீர் செய்யப்படாத விடத்தே முறைசாராக் கல்வி திட்டம் தேவைப்பாடுடையதாகக் காணப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரினாலேயே வினைத்திறன, விளைதிறன் கொண்ட சிறந்த சூழல் உருவாக்கப்படுகின்றது அதேபோன்று மாணவர் மனதிலும் ஆசிரியர் தம்மீது அக்கரை கொண்டுள்ளார். தம் எதிர்கால வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பார் என்ற நம்பிக்கையும் உணர்வும் காணப்பட வேண்டும். இதனாலேயே “ஆசிரியர்கள் ஞான விளக்குகளாவர்” என்ற கருத்தினை சோக்ரடிஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார் அதாவது ஆசிரியர்களானவர் வெறுமனே போதிப்பவர்களாக அன்றி சகல துறைகளிலும் நின்று கற்றல் கற்பித்தல் நிபுனத்துவத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய நிலையில் கல்வி உளவியல் என்பதும் மாணவர்களின் எதிர்காலத்தினை சீராக்கும் வகையில் பல நுட்ப முறைகளை கையாளுமாறு வலியுறுத்துகின்றது அதாவது மாணவர் சமூதாயத்திற்கு முன்மாதிரியாகவும், திறமையான அணுகுமுறைகளையும் கைக்கொண்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
“ஆசிரியரானவர் உலகை விமர்சனம் செய்பவர் மட்டுமல்லாது குறைகளிலிருந்து தீர்வு வழங்கி சமூகத்தை மாற்றியமைக்கக் கூடியவர்கள்”
வெவ்வேறு நிலையினையுடைய மாணவர்களை இணங்கண்டு கொள்வதற்காக பல நுட்ப முறையினைக் கைக்கொள்ள வேண்டும் என கல்வி உளவியல் வெளியிட்டுள்ளது.
1. அவதானிப்பு முறை
2. அகநோக்கு முறை
3. வினாக் கொத்து மறை
4. தனியாள் முறை
5. புள்ளிவிபரவியல் முறை
போன்ற முறைகளை சுட்டிக்காட்டுகின்றது இவ் அவதானிப்புத் தொடர்பு மூலம் மாணவர்களை இலக்கு (Goal) நோக்கி வடிவமைக்கமுடியும் ஒரு பெற்றோரிலும் பார்க்க ஆசிரியரினாலேயே ஒரு மாணவனின் உளநிலையை கணிப்பிட்டுக் கொள்ள முடிகின்றது மேலும் ஆசிரிய மாணவ இடைத் தொடர்பு (Intereaction) என்பது மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இன்று கற்பித்தல் பணியினை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு பல ஆய்வுகளும், புதுப்புது சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு கற்றல் கற்பித்தல் புத்தாக்கம் பெறுகின்றன இந்த வகையில் ஆசிரியத்துவம் கொண்டிருக்க வேண்டிய சிறப்புத் தேர்ச்சி, நற்பண்பு பற்றி கொலம்பிய பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வின் முடிவானது வெறுமனே பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் சிறந்த ஆசிரியர்களாகக் கொள்ளப்படமாட்டார்கள் மாறாக பின்வரும் அனைத்துப் பண்புகளையும் இணைத்திருக்கும் வகையிலேயே சிறந்த ஆசானாக மாறும் வகிபாகத் திணையும் பெறமுடியும்.
1. பரந்த அறிவு
2. ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும் திறன்
3. முகமலர்ச்சி
4. கவர்ச்சிகரமான குரல்
5. நல்லபிமானம்
6. நடுநிலைமை
7. சமூக இசைவு
8. தன்னம்பிக்கை
9. பல்துறை நிபுனத்துவம்
10. சுறுசுறுப்பு
11. நேரத்திற்கு தொழில் புரிதல்
12. சரியான முடிவெடுத்தல்
13. வசீகரிக்கும் தன்மை
14. நலன் விரும்பும் மனப்பான்மை
15. தன்னலமற்ற சேவை
16. ஒத்துழைப்பு
17. மன தைரியம்
18. தலைமைத்துவம்
இவ்வாறு பல நற்பண்புகள் இணைந்தே கட்டமைக்கப்பட்டதாக ஆசிரியத்துவம் காணப்படவேண்டும் என்கிறது இவ்வாறு ஆசிரியரின் பணிகளைத் தெளிவுபடுத்துவதைப் போன்று பாடசாலைக் கல்வியிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இன்றைய உலக மாற்றங்களுக்கு ஏற்ப எதிர் கொள்ளக் கூடிய வகையில் 2007ம் ஆண்டு பாடவிதான மறுசீரமைப்பில் இலங்கையின் முறைசார் பாடசாலைகளில் 5E என்ற மாதிரி முறையின் அறிமுகமும் முக்கியமானது அதாவது இதுவரை காலமும் இருந்த பாடசாலைக் கலைத்திட்டங்களால் மாணவர்களின் ஆற்றல் விருத்தி செய்யப்படவில்லை. என்பதிக்கினங்க இவ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 5நு என்பதானது பின்வரும் வகையில் அமைந்துள்ளது.
1. ஈடுபடுத்தல் (Engagement)
2. கண்டறிதல் (Exploration)
3. விளக்கமளித்தல் (Expiation)
4. விரிவாக்கம் (Elaboration)
5. மதிப்பீடு (Evolution)
ஆசிரியர்களின் நிலை மாற்று வகிபங்கினை ஏற்றுச் செயற்பட வைப்பதானது இதன் நோக்கமாகும். தகவல்களை முன்னின்று ஒப்பிப்பவராக இல்லாமல் பல்வேறு பாத்திரங்களில் நின்று மாணவர்களை வழிப்படுத்துவதாகும் வசதியளிப்பவர், மாற்றுபவர், முகாமையாளர், ஆலோசகர், ஆய்வாரள், மாற்று முகவர், வளவாளர், உதவியளிப்பவர் பொன்ற பல வகிபங்கினைப் பெற்றுச் செயற்பட தொழிற்பட வைப்பதாகும்.
இதனால் மாணவ மனப்பாங்கு அறிவு திறன், போன்றன மூலைச்சலவை செய்யப்பட்டு வளப்படுத்தப்படுகின்றன இவ்வாறு கற்றல் கற்பித்தலில் அக்கரை கொண்டவர்களாகக் காணப்படும் ஆசிரியர்களுக்கு மற்றும்மொரு பாரிய பொறுப்பும் கடப்பாடும் இருக்கின்றது. இன்றைய கல்வியியல் நிலையில் மாணவர்களின் நடத்தைச் சீராக்கம் என்பது முக்கியம் பெறும் ஒன்றாகக்காணப்படுகின்றது. ஆயினும் இன்றைய நிலையில் ஒழுக்க விழும்மியங்கள் கடைப்பிடினக்கப்பட்டு வருகின்றனவா என்பது பெரும் குறையாகவே உள்ளது இதற்ற காரணம் இன்றைய கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மாணவன் சமூகமயமாக்கப்பட்ட விதம் மற்றும் குடும்பத்தின் சிக்கல் நிலை போன்றவாக இருக்க முடியுமாக அறியப்படுகின்றது ஆயினும் இம் நடத்தைச்சீராக்கம் பற்றி ஆய்வுக்க உற்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது அதாவது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பல மொழியானது குறிப்பிடத்தக்கது என்னதான் கல்வியில் சிறப்பிடம் பொற்ற ஒருவராகவோ அல்லது ஆலுமையுடையவராக இருப்பினும் ஓழக்கவிலுமியம் கொண்ட ஒருவராலேயே வெற்றி கொள்ளப்படுகிறது என்பது நிதர்சனமானது இதனாலேயே அவரின் சுய கௌரவம் பாதுகாக்கப்படுகின்றது இந்த வகையில் நடத்தை சீராக்கம் ஒக்க விழுமியம் பேனல் போன்றன வகுப்பறையில் இருந்தே பயிற்றுவிக்கப்பட வேண்டிய போறுப்பு ஆசிரியத்துவத்திற்கு இருக்கின்றது.

மாணவர்களின் உள நெருக்கீடு : இன்றைய நவீன கல்வியியல் முறையானது மாணவர்களுக்கு என விசேட செயற்திட்டங்கள் நோக்கியதான கற்றல் கற்பித்தல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடையக் கூடிய ஓர் நிலையினை எட்டியுள்ளோம். இன்றைய நிலையில் பன்திறன் கொண்ட மாணவர் சமூதாயம் உருவாக்கப்பட்டு வருகின்றது என்பதில் வெளிப்பாடுகள் சான்றுபகிர்கின்றன பெருபெறுகள் அடைவுமட்டச் சான்றுதல்கள் பரிசில்கள் போன்றன இதனை வெளிக்காட்டுகின்றன
ஆயினும் இன்றைய நிலையில் உள நெருக்கீட்டிற்கும் சுமைகளுக்கும் ஆளாகக் கூடியவர்களாகக் காணப்பட்டு வருகின்றன மகிழ்சி கரமாண கற்றல் விரும்பக்கற்றல் என்பது குறைந்த நிலையிலேயே உள்ளது இதற்கு அதிகூடிய காரணம் பெற்றோர்களினாலேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.
ஆரம்பக் கல்வியில் இருந்து எழுதும் திறன், படிக்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன், பேசும் திறன் போன்ற நான்கு திறன்களும் முறைமையடையும் போதே ஒரு மாணவனானவன் அம் மொழியில் புலைமை பெற முடியும் ஒரு பிள்ளையின் சொற்கள் கூடிய விதத்தில் 2000 சொற்களாகும் வரை வாக்கியங்களை சரிவர பொருள்விளங்கி வாசிக்க முடியாது இதற்காகப் பொற்றோர் தன் பிள்ளை முன்பள்ளிக்கு சென்ற உடனே வாசிப்புப் பெற்று விடவேண்டும் என்பதில் ஐயம் கொள்வது நியாயம் இல்லை மாறாக முன்பள்ளி என்பது இயைந்து மற்றவ்ரகளோடு (சகபாடிகளோடு) இடைவினை கொள்வதும் பேச்சுத்திறனை அதிகரிக்கும் ஓர் களமாகக்காணப்படுகிறது ஒரு பிள்ளை வாசிப்பு திறனை அதிகரிப்பதிலும் முன்னமே பேச்சுத்திறன் மேலாக்கம் பெற வேண்டும் தன்னுடைய பிள்ளைகள் வேகமாக, அவசரமாக முன்னேற வேண்டும் என்பதற்காக “குருவித்தலையில் பணங்காயைச் சமத்துவது போன்று” தங்கள் பிள்ளைகளின் மனதில் சுமைகளை பரப்பி விடுகின்றனர். அவரவர் கொள்தகுதிறன் (Capcity) கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக – தரம் 5 – புலமைப்பரிசில் பரீட்சையில் தனது பிள்ளை சித்தி எய்த வேண்டும் என்பதற்காக தரம் - 3லிருந்து விசேட பாடத்திட்டம் என்றும் மாணவர்களை பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது உதாரனம் காட்டி அவர்களின் பிள்ளை சித்திபெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தியெய்த வேண்டும் அப்படியென்றால் தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது. உதாரணம் காட்டி அவர்களின் பிள்ளை சித்தி பெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தி எய்த வேண்டும் அப்படி என்றால்தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் அதிகரித்து வருவதான அறியமுடிகின்றது.
இவ்வாறு பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானதாக அமையும் நிலையிலும் கூட அவர்களின் வயதிற்கேற்ற கல்வியின் வளர்ச்சியினைப் பெறுவதற்கும் அவர்களின் உளவிரத்தியினை மேற்கொள்வதற்கும் ஒவ்வோர் பெற்றோரும் பங்களிப்புச் செய்ய வேண்டிய தேவையுடையவர்களாக இன்றைய மாணவர்கள் காணப்படுகின்றனர்.
உளவிருத்தியினை ஏற்படுத்தும் ஆன்மீகக் கல்வியின் முக்கியத்துவம் இன்று பெற்றோர்களால் 2ம் தரமாகவே நோக்கப்படுகின்றது. மாணவர்களின் சிந்தனை விருத்தி நினைவாற்றலினை அதிகரிக்கும் ஓர் முக்கிய நற்பயன் ஆன்மீகக் கல்விக்கு உண்டு என்பதையும் அது உள அமைதியினை ஏற்படுத்துகின்றது என்பதனையும் பெற்றோர்கள் சிந்திக்கத் தவருகின்றனர். இவ்வாறு ஓய்வின்றி பிள்ளையின் மனதினைக் கணமாக்கும் பெற்றோர்கள் குழந்தையின் உள விரத்தி என்பது குழந்தை முதலே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையை உணர வேண்டும்.
உதாரணத்திற்கு ஓர் மாணவனை அனுகும் சமயம் தனது பெற்றோர் என்பவர் ஓர் ஓய்வு என்ற நிலையினை தங்களுக்குத் தரத்தவருகின்றனர் என்ற கூற்று தரப்படும் நிலையினை அறியமுடியும். இவ்வாறு இன்று உளரீதியான தாக்கம் மிருந்த நிலையில் உள்ளது.
இவ்வாறு ஆர்வம் காட்டும் பொற்றோர் பிட்பட்ட காலங்களின் பிள்ளைகள் மீதான கண்காணிப்பினையும் கரிசனையினையும் காட்டத்தவருகின்றனர். ஆனால் பெற்றோர் தனது பிள்ளையில் அனைத்து வயதுப்பருவங்களிலும் அக்கரை காட்டக் கூடியவர்களாகவும் ஊக்கமூட்டக் கூடியவர்களாகவும் காணப்பட வேண்டும். இதனாலேயே “பெற்றோர்கள் பிள்ளைகளின் நிரந்தர ஆசிரியர்கள் அவர்களுக்கு ஓய்வு என்பது கிடையவே கிடையாது” என்ற கூற்று நினைவுறுத்தப்படுகின்றது.
அத்தோடு ஓர் பிள்ளையின் குடும்பச் சூழலும் உளநெருக்கீடாக அமைவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதாவது இன்றைய நிலையில் குழந்தையானது புத்திமதிகளைக் கேட்டு நடப்பதை விட பெற்றோர்களின் நடத்தைகளைச் சுலபமாக பின்பற்றக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். இந்த வகையில் தாய் தந்தையர்களுக்கிடையிலான பழக்கவழக்கங்கள் பிள்ளையில் பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. திய நடத்தைகளும் அமைதியும் அற்ற குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் உளநெருக்கீட்டிற்கு உற்பட்டவர்களாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் பெற்றோர் பிள்ளையின் மீது திணிக்கும் செயல்ப்பண்பும் அவர்களின் உள நெருக்கடியினைத் தூண்டுவதாகவும் உள்ளது. அத்தோடு மாணவர்கள் சகபாடிகள் சம வயதுக்குழுக்கள் விளையாட்டுக் குழுக்கள் போன்றவற்றினூடாகவும் உள நெருக்கீட்டிற்கு உள்ளாக்கப்படுவதனை இன்று அவதானிக்கக் கூடிய நிலையில் உள்ளது.

இவ்வாறு பெற்றோர்கள் சமவயதுக்குழுக்கள் சூழல் போன்றவற்றினால் உள நெருக்கீட்டிற்குள்ளாகும் அதே சமயம் ஆசிரியச் சமூகத்தினாலும் உளநெருக்கீடு மாணவர்களுக்கு ஏற்படுகின்றது. அதாவது பின்தங்கிய பிரதேச மற்றும் எல்லைப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியரின் கவலயீனமும் அப் பாடசாலை மாணவர்களின் உள்ளங்களில் ஓர் விருத்தியினைப் பெறமுடியாத நிலையில் உள்ளது. அதாவது அதிக விடுமுறை மற்றும் நேரத்திற்கு தொழில் புரியாமை குறைந்த நேரக்கற்கை போன்றனவும் மாணவர்களில் பிரதிபலிக்கக் கூடியதே. மேலும் தொடரான விடுமுறையடுத்து பரீட்சைகாலங்களில் மேலும் கற்பித்தலைக் கணமாக்கும் வேளையில் மாணவனினால் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம் போன்றனவும் காணப்படக்கூடியதாகவே உள்ளது. அதாவது ஒரு நிருவாகத்துறையில் பணிபுரியும் ஊழியர் ஒரு நாள் விடுமுறை என்றால் அவர் தனது பணியினை அடுத்தநாள் தொடரக் கூடியதாகவிருக்கும் ஆனால் ஓர் கற்றல் நாள் என்பது அவ்வாற நிலையில் அல்ல. என்பது சிந்தனைக் குறியதே.
இன்யை சூழலில் புதிய புதிய சீர்திருத்தங்கள் மாணவர்களுக்காக அறிமுகம் பெறும் வேளையிலும் அவை அனைத்தும் சகலரினாலும் ஏற்கப்பட்டு பன் விருத்தி வகிபங்கு மேற்கொள்ளப்பட வேண்டியதும். உள வளர்ச்சி மேன்மை பெறுவதும் தேவையை நோக்கியதே இந்த வகையில் மாணவர்களும் - ஆசிரியர்களும், மாணவர்களும் - பெற்றோர்களும், பெற்றோர்களும் - ஆசிரியர்களும் என்ற நிலையில் காணப்படும் இன்றைய கல்வியியல் முறையானது.
1. மாணவர்களின் தலைமை தாங்கும் பண்பு
2. ஒத்துழைப்பு
3. நேரிய கற்றல்
4. விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு
5. கீழ்ப்படிதல்
6. கட்டளைகளை ஏற்று நடத்தல்
7. சமநிலைத் தன்மை பேனல்
8. தோல்வியை ஏற்றுக் கொள்ளல்
9. ஒழுக்க வழுமியங்களில் ஈடுபடல்
10. இலக்குகளுக்கு வளப்படல்
11. ஊக்கமளிக்கப்பட்டிருத்தல்
போன்ற பண்பாட்டு பழக்கவழக்கங்களும் மாணவர் சமுதாயத்தில் விருத்தி செய்யப்படுகின்றது. இந்த வகையில் அறியாமை எனும் இருளை நீக்கி அறிவு எனும் ஒளியைப் பரப்புவது ஆசிரியரின் பிரதான கடமையாகின்றது. இவ்வாறு பல்வேறு கடமைகளைக் கொண்ட ஆசிரியர் சமுதாயம் பல்வேறு அறிவுப் பிரவாகத்தைக் கொண்டவர்களாக விளங்கப்பட வேண்டும் சமகால சூழ்நிலைக்கேற்ப பல்வேறு திறன்களையும் சுயநம்பிக்கையினையும் சுயமதிப்பீட்டினையும் பெற்றுக் கொள்ள தம்மைத் தாமே வளப்படுத்த வேண்டிய காலத்தின் தேவையுடையவராக ஆசிரியத்துவம் காணப்படுகின்றது. அத்தோடு மாணவர்களின் செயலாக்கத்தினை வளப்படுத்தும் வகையில் எதிர்பார்க்கப்படுவது காணக்கூடியதே.
ஆத்தோடு பெற்றோரும் தங்களது பிள்ளைகளில் சகல வகையிலும் வகனம் செலுத்தக் கூடியவர்களாகக் காணப்பட வேண்டும். ஓர் உயர்ந்த கட்டத்திற்கு அத்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல ஒரு மனிதனின் குழந்தைப்பருவமும் அவனின் குடும்பச் சூழலும் பாரிய பங்களிப்பினை கொண்டுள்ளது. அத்தோடு குழந்தையின் (மாணவனின்) அமைதியான சூழல், உடல், உள, அறிவு, ஆன்மா விருத்தி கட்டுமானம் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக மாற்றுவதில் பெற்றோரின் பங்கு முழுக்க முழுக்க அமைந்து விடுகின்றது. எச்சந்தர்ப்பத்திலும் பிள்ளைகள் தம்மிலும் பிறரிலும் கொண்டுள்ள எதிர்பார்ப்பு இழக்கப்படும் போது உள நெருக்கீட்டினையும், மன உடைவு, மன அழுத்தம், பற்றற்ற நிலை போன்ற பண்பினை வளர்த்தெடுக்கின்றனர்.
இந்த வகையில் ஆசிரியர் பெற்றோர் மாணவனின் பன்விருத்தியில் பங்கு பற்றல் சிறப்பிடம் பெறவேண்டிய வகையில் செயற்படுவது சிறந்த எதிர்கால. சமுதாயப் பரம்பலுக்கு உருதுனையாக அமையக் கூடியவர்கள். எனவே கூழந்தைகளையும் மாணவர்களையும் நேரடியாக அணுகக் கூடியவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களுமேயாகும்.
“எனவே ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்ற நியூட்டனின் விதி இன்று மாணவர்களின் செயற்பாடுகளுக்கு ஆசிரியர் சமூகமும் பெற்றோர்களும் தாக்கத்தின் மறுதாக்கமாக அமைகின்றது என்பது உண்மையான ஒன்றேயாகும்.

என்.பீ.முகம்மது றிபாஸ்


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...