Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Friday, October 19, 2012


உலகை ஆண்ட தமிழன் வரலாறு!

உலகை ஆண்ட தமிழன் வரலாறு!


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.
 

நன்றி : தமிழாசான் பதிவேடு [[http://tamilaasan.blogspot.com/2012/07/blog-post_25.html]]

Post Comment

Thursday, October 18, 2012


DATE WITH A WOMAN

\After 21 years of Marriage, my Wife wanted me to take another Woman

out to Dinner and a Movie.
She said I Love You but I know this other Woman loves you and would Love

to spend some Time with You.
The other Woman that my Wife wanted me to visit was my
 MOTHER,
who has been a Widow for 19 years,
but the demands of my Work and my three Children had made it possible
to visit her only occasionally.
That night I called to Invite her to go out for Dinner and a Movie.

'What's wrong, are you well,' she asked?
My Mother is the type of Woman who suspects that
a Late Night Call or a Surprise Invitation is a sign of Bad News.

'I thought that it would be pleasant to be with you,'
I responded.
'Just the two of us.'

She thought about it for a moment, and then said,
'I would like that very much.'
That Friday after work, as I drove over to pick her up I was a bit Nervous.
When I arrived at her House, I noticed that she too seemed to be Nervous
about our Date.
She waited in the Door with her Coat on.
She had Curled her Hair and was wearing the Dress that she had worn to
Celebrate her last Wedding Anniversary.
She smiled from a face that was as Radiant as an Angel's.


'I told my Friends that I was going to go out with My Son, and they were impressed, '
She said, as she got into the Car.
'They can't wait to hear about our meeting'.

We went to a Restaurant that, although not Elegant, was very Nice and Cozy.
My Mother took my Arm as if She were the First Lady.
After we sat down, I had to read the Menu. Large Print.
Half way through the entries, I lifted my eyes and saw Mom sitting
there staring at me.
A Nostalgic Smile was on her Lips.
'It was I who used to have to Read the Menu when you were Small,'
She said.
'Then it's Time that you Relax and let me Return the Favor,'
I responded.
During the Dinner, we had an Agreeable Conversation, nothing
 Extra-ordinary, but catching up on recent Events of each others Life.
We talked so much that we missed the Movie.
As we arrived at her House later,


She said, 'I'll go out with you again, but only if you let me invite you.'
I agreed.
'How was your Dinner Date?' asked My Wife when I got Home.
'Very Nice. Much more so than I could have Imagined,' I answered.

A few days later, my Mother died of a Massive Heart Attack.
It happened so suddenly that I didn't have Time to do anything for her.
Some time later, I received an Envelope with a Copy of a Restaurant Receipt
from the same place Mother and I had dined.
An Attached Note Said:

'I paid this Bill in Advance.

I wasn't sure that I could be there;

But nevertheless, I paid for Two Plates food that you like

One for You and the Other for Your Wife.

You will never know what that Night meant for Me.
I Love You,
My Son.'
At that moment, I understood the Importance of saying in Time:
'I LOVE YOU!'
and to give our Loved Ones the Time that they Deserve.
Nothing in Life is more important than God and yourFamily.
Give them the Time they Deserve, because these Things cannot be
Put Off till 'Some Other Time.'

Post Comment

Tuesday, July 24, 2012

தாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை



பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது. 
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிப்பார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். தாய்மொழி வெறும் ஓசையும், எழுத்து வடிவமும் கொண்டது மட்டுமல்ல, அந்தந்த இனத்தவரின் உணர்வோடு கலந்த ஒன்றாகும். பன்னாட்டு கலாச்சாரங்களோடு நாம் வாழ்ந்தாலும் தாய் மொழியை மட்டும் எவ்விடத்தும் எதற்காகவும் இழந்துவிடக் கூடாது.
யுநெஸ்கோ தாய்மொழி கல்வியின் அவசியத்தை உலகெங்கும் பரப்பி வருகிறது. உலகில் உள்ள 7000 மொழிகளில் பாதிக்கு மேல் அழியும் நிலையில் உள்ளது. இதனை அறிந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து உலகத்தின் உள்ள எல்லா மொழிகளை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக சிறுபான்மையினர் பேசும் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை அழிவில் இருந்து காக்க செயல்படுகிறது. பன்மொழி கலாச்சாரத்தை வரவேற்கிறது. மே 16 , 2007 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 2008 ஆம் ஆண்டை உலக தாய்மொழி  ஆண்டாக அறிவித்துள்ளது.
2012 தாய் மொழி தினத்தை ஒட்டி யுநெஸ்கோவின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட  செய்தி மடலின் தமிழாக்கம்
ஒரு மனிதனுக்கு தெரிந்த மொழியை பேசினால் அது அவன் அறிவை மட்டுமே அடையும், அதுவே அவன் தாய் மொழியில் சொன்னால் அவன்  இதயத்தை சென்றடையும்’. என்று தென்னாப்பிரிக்க புரட்சியாளர் நெல்சன் மண்டேலா கூறினார்.  நம் சிந்தனையில் இருக்கும் மொழி மற்றும் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி இதுவே நமக்கு கிடைத்த பெரும் சொத்து. பன்மொழிக் கொள்கையின் மூலம் நல்ல தரமான கல்வியும் எல்லா மொழிகளுக்கும் உரிய இடத்தைத் தந்து ஒரு ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சூழலை உருவாக்குவோம். நம்முடைய வாழ்கையின் தரம், முனேற்றம் இந்த இரண்டையும் நம்  மொழியாலே அமைகிறது.  மொழி தான் நாம். அதை பாதுகாப்பத்தின் மூலம் நம்மையே நாம் பாது காக்கிறோம்.
உலக தாய்மொழி தினத்தை பன்னிரண்டு யுனெஸ்கோ அமைப்பு வருடங்களாக கொண்டாடுகிறது. இந்த தினம் உலகில் உள்ள பல்வேறு மொழிகளை பாதுகாக்கவும் பல மொழி கொண்ட பல் வேறுபட்ட கலாச்சாரங்களை அங்கீகரிக்கவும் செய்கிறது. இந்த பதிமூன்றாவது வருட கொண்டாட்டம் பன்மொழிகளைக் கொண்ட ஒரு கல்வியை அர்ப்பணிக்கிறது. இதுவரை ஆராய்சியாளர்களின் பணி, பன்மொழி கொண்ட  கல்வியின் சிறப்பினை  நமக்கு உணர்த்துகிறது. அது சிறந்த முன்னேற்றத்தையும், குறிக்கோளையும் துரிதப்படுத்துகிறது. தாய்மொழியில் கல்வி கல்லாமை என்னும்  நிலைமை சமூகத்தில் இருந்து விரட்டபட வேண்டிய ஒன்று என்பதை உலக தாய்மொழி தினம் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் உண்மையில்  சிறுபான்மையினர் பேசும் மொழிகள் தற்காலிக கல்வி முறையால் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் தொடக்கக்கல்வியை தாய்மொழியில் தொடங்கி பிற்பாடு தேசிய மற்றும் பயன்பாட்டு மொழிக்கு மாறுவதன் மூலம் சம உரிமையும் அனைத்து மொழியினரின் பங்களிப்பையும் அதிகரிக்கும்.
யுநெஸ்கோ வின் அலைபேசி கற்றல் வாரம் மூலமாக அலைபேசி தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து மொழி கல்வியை எவ்வளவு சிறப்பாக கொடுக்கமுடியும் என்பது தெரிகிறது. இதன் மூலம் பன்மொழி கல்வியை பத்துமடங்கு எளிமையாக கொடுக்கமுடியும். இது நம் தலைமுறைக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதனால் ஒரு மொழியின் குறைபாட்டை தடுக்கமுடியும். மொழிகளாக நாம் வேறுபட்டு நிற்பது பொதுவான உலகப் பண்பாடு. இந்த வேறுபட்டால் சமூகம் சிதறுண்டு கிடப்பதும் இயல்பே. இந்த நூற்றாண்டின் இறுதியில் 6000 மொழிகளில் பாதி மொழிகள்  அழிந்துவிடக்கூடிய நிலையில் உள்ளன. யுநெஸ்கோவின் உலகமொழி வரைபடமே அழியும் தருவாயில் உள்ளது. ஒரு மொழியின் அழிவு நம் மனித சமூகத்தின் கலாசார ஏழ்மையே ஆகும். ஒவ்வொரு மொழியும் ஒரு  கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு, அது ஒரு ஆக்கப்பூர்வமான பண்பாட்டின் கூட்டு. மனித குலத்தின் வேறுபட்ட கலாச்சாரத்தை(cultural diversity) இயற்கையின் வேறுபட்ட உயிரியல் இனங்களுடன்(Bio diversty) நாம் ஒப்பிடலாம். பல பழங்குடியினரின் மொழியல் உயிரியல் இனங்களின் உண்மையும் அதை நிர்வகிப்பதற்கான வழிமுறையும் புதைந்துள்ளது. வேறுபட்ட உயிரினங்களின் பாதுகாப்பு எப்படியோ அதைப் போன்றே பல்வேறு மொழி கலாச்சாரங்களின் பாதுகாப்பும். ஒரு மொழியின் வலிமை என்பது ஒரு சீரான பண்பட்ட வளர்ச்சியில் உள்ளது.. இதையே யுநெஸ்கோ அமைப்பு, ரயோவில் நடந்த ஐநாவின் சீரான பண்பட்ட வளர்ச்சிக்கான கருத்தரங்கில் கூறியது.
ஒரு மொழியின் செழுமை அந்த மொழி பேசும் மற்றும் அதை பாதுகாக்க துடிக்கும் அந்த சமூகத்தினரின் கையிலே உள்ளது. யுநெஸ்கோ அப்படிப் பட்ட சமூகத்திற்கு மதிப்பளிக்கிறது மற்றும் அவர்களின் கல்விசமூக வளர்ச்சிக்காக குரல் கொடுத்து அவர்களின் சமூக திட்டங்கள் செம்மையாக இருக்க உதவுகிறது. பன்மொழி கொண்ட சமூகம் என்பது நம்முடன் வாழ்ந்துகொண்டுள்ள ஒரு வளம். அதை நம் உயர்வுக்கு பயன்படுத்துவோம். தாய் மொழியைக் காப்போம். அதை உயர்த்துவோம்.

Post Comment

Thursday, June 28, 2012

Triple Bypass Heart Surgery



Dear Readers I will hava a triple bypass surgery on 3rd July 2012 at National Heart Institute( IJN) Kuala Lumpur. I decided to research and share what I learned about it. Sorry for the distraction; but at our age we should be prepared for it. I hope this article will help to those who needs it. 

The National Heart Institute sets its mission as ‘to build healthier lives, free of cardiovascular diseases and stroke’. This gives us the picture of how serious people are in fighting death-causing diseases such as heart attack and stroke. Promoting healthy living practices somehow contribute to the growing awareness of the people on the dangers of these diseases and how these can be prevented.
Coronary Heart Disease (CHD), also referred to as coronary artery disease, is said to be topping the list of the major causes of death in the US regardless of gender. This CHD is caused by the accumulation of fatty substances in the blood vessel to the heart. These plaque or fatty substances will solidify and eventually cause heart blockage. The coronary arteries/blood vessels supply the heart with blood and oxygen. When the heart is not receiving enough blood and oxygen, the heart may slow down or stop. It will start manifesting in mild to severe chest pains, escalating to heart attacks or stroke. The worst case would even lead to death.

If you have blocked arteries, you run a very high chance of having a heart attack. But how are these blockages in the coronary arteries taken out?
There are two ways. If the blockage is not severe, angioplasty or stent placement are possible options. For extreme cases, it’s bypass surgery.
What is Bypass Surgery?
Let us first understand what bypass surgery is. More technically known as Coronary Artery Bypass Graft, this medical surgical procedure allows redirecting or bypassing blood around blocked arteries or blood vessels to allow an improved blood and oxygen flow to the heart. Arteries from other parts of the body are attached and implanted to the coronary arteries to serve as the new arteries to supply the heart with the needed blood and oxygen. The number of coronary arteries bypassed during the procedure is indicated by the terms single, double, triple, etc. For one coronary artery bypassed, the procedure is called single bypass surgery. For two arteries, it’s double bypass and so on.
Triple Bypass Surgery
This is a very delicate open heart surgery where three new blood vessels are grafted to the three blocked arteries. The surgeons decide on the number of grafts to be performed based on the severity of the conditions of the blocked arteries and so that the procedure will not be performed again in the future. This surgical procedure entails some risk of complications and the surgeons performing the surgery take all the necessary pre-surgery evaluation and consultations to make sure that the surgery will be a success.
Candidates for Triple Bypass Surgery
Anyone exhibiting observable symptoms of coronary heart disease is a likely candidate for triple bypass surgery. Some symptoms to note are :
  • Chest pains usually felt on the left side
  • Extreme bouts of anxiety
  • Severe pain felt traversing the arms, neck, shoulders, tummy area and back
  • Frequent palpitations
  • Nausea and vomiting
  • Excessive sweating
  • Difficulty in breathing
Risks of Surgery
As in any surgery, there are the usual risks patient have to deal with after the procedure. Some of these risks common to all types of surgery are:
  • Breathing problems
  • Infections (urinary tract, chest and lungs)
  • Blood clots in the legs
  • Blood loss
Surgical risks of Triple Bypass Surgery include :
  • Onset of heart attack or stroke
  • Possible kidney or lung failure
  • Chest wound infection
  • Possibility of memory loss
  • Post-pericardiotomy syndrome
Prognosis
In general, the outlook for patients who have undergone this procedure is good. Most surgeries keep the grafts unblocked and working well for many years. However, this procedure is no guarantee for the complete cure for coronary heart disease. Even the grafted arteries, over time may accumulate fatty substances which will harden and result to blocked arteries if the patient do not seriously consider life-changing lifestyle to slow down its recurrence.

Post Comment

Wednesday, March 21, 2012

உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை




அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.
மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.
காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.
தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.
அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள்.
ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Posted By Vimal On März 20th, 2012 04:33 PM | உலகம்பொது அறிவு  

Post Comment

Thursday, March 1, 2012

தமிழ் மக்கள்


1.2 தமிழ் மக்கள்

தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள்.
பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம்
பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள். தமிழர் பண்பாடு,
உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு. இத்தகைய சிறப்புடைய
தமிழ் மக்களின் இன்றைய தாழ்ந்த நிலையைச் சுட்டிக் காட்டி,
அவர்கள் பெறவேண்டிய புத்துணர்ச்சியையும் வலியுறுத்திப்
பாரதிதாசன் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

1.2.1 தமிழரின் தொன்மைச் சிறப்பு
இந்த நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம்
தோன்றிவிட்டது. மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி
என்று தமிழினத் தொன்மைச் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

    புனல்சூழ்ந்து வடிந்து போன
    நிலத்திலே புதிய நாளை
    மனிதப் பைங்கூழ் முளைத்தே
    வகுத்தது மனித வாழ்வை
    இனிய நற்றமிழே நீதான் எழுப்பினை
(அழகின்சிரிப்பு : தமிழ் - முதல்பாடல் வரிகள்: 1 - 6)

(கூழ் = பயிர்)
மேலும் தமிழ்மொழியின் தொன்மையினையும், தமிழர்கள் தொன்மை
நாகரிகம் கொண்டவர்கள் என்பதனையும்,

    மொழியில் உயர்ந்தது தமிழ்மொழியே - பண்டு
    முதல் நாகரிகமும் பழந்தமிழ் மக்களே
(தேனருவி, தமிழன், வரிகள்: 11 - 13)

என்று சுட்டுகிறார்.

1.2.2 தமிழரின் பெருமை
தமக்கென ஒரு தனிப் பண்பாட்டையும், நாகரிகத்தையும்
உடையவர்கள் தமிழர்கள். பெருமைக்கு உரிய தமிழர் பண்பாடு
இன்று வரையிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. அந்தப்
பண்பாட்டுக் கூறுகளில் விருந்தோம்பல் முதன்மையானது.

• விருந்தோம்பல்
தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனமக்கள் நல்ல பண்புகள்
பொருந்தியவர்கள். அவர்களின் பண்புகளில் சிறந்தது
விருந்தோம்பல். சங்ககாலம் முதற்கொண்டே விருந்தினரைப்
போற்றி வாழ்கிறார்கள்.     விருந்தினர்களைப் போற்றி
வாழ்வதினாலேயே உலகம் முழுவதும், புகழுடன் வாழ்கிறார்கள்
தமிழர்கள் என்கிறார் பாரதிதாசன்.


    நற்றமிழர் சேர்த்த புகழ்
    ஞாலத்தில் என்னவெனில்
    உற்ற விருந்தை
    உயிரென்று - பெற்று உவத்தல்.
(குடும்பவிளக்கு, இரண்டாம் பகுதி -
விருந்தோம்பல் - மாமன் மாமி மகிழ்ச்சி பாடல்)

தம்மை வந்து அடைந்த விருந்தினர்களுக்குத் தமிழர்கள்,
விருந்தோம்பலைத் தம் உயிருக்கும் மேலாகக் கருதினர். எனவே
விருந்தினரைப் பேணும் பொழுது பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்
எனக் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

• தமிழரும் தமிழ்க் கலையும்
சீரும் சிறப்புமாக வாழ்ந்த பண்டைத் தமிழர் நிலையையும்
இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார் பாரதிதாசன்.
புலிக் கொடியும், வில் கொடியும், மீன் கொடியும் கொண்டு ஆட்சி
செய்த மூவேந்தர் காலத்தில், உலகெங்கும் புகழ் பரப்பும் வகையில்,
செந்தமிழின் ஒலியே கேட்டது. தமிழ் நாட்டுக் கலைகளே
ஒளியாய்க் கண்முன் காட்சியளித்தன. ஆனால் இன்று, பிறமொழி
ஒலிகளும், பிறநாட்டுக் கலைகளுமே மலிந்து உள்ளன. இந்த
நிலைமாறி மீண்டும் பழைய நிலை என்று வருமோ என்று
ஏங்குகிறார் பாரதிதாசன். எனவே

காட்சி

    ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்
    ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்
    புலி, வில், கயல் கொடி மூன்றினால்
    புது வானம் எங்கும் எழில் மேவிடும்
    அந்த வாழ்வுதான் எந்நாள் வரும்?
(இசையமுது, எந்த நாள்: 5-8)

(கயல் = மீன் , மேவிடும் = பொருந்திடும்)
என்று குறிப்பிடுகிறார்.

• இசைத்தமிழ்
இசையில் - தமிழ் இசையில் தமிழர்கள் எந்த வகையில்
ஈடுபாட்டுடனும், புலமையுடனும் இருந்திருக்கிறார்கள் என்பதையும்
பாரதிதாசன் விளக்கிக் கூறியுள்ளார்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையின்
பொருள்களிலிருந்து - அவற்றின் ஒலிகளிலிருந்து இசையை
அமைத்துக் கொண்டனர். குயிலின் குரல் இனிமையைக் கேட்டு
மகிழ்ந்ததைப் போல், தாம் கேட்டு இன்புற்ற பறவைகளின் இனிய
ஒலிகளிலிருந்தும், வண்டுகளின் ரீங்காரத்திலிருந்தும், மூங்கிலின்
ஒலியிலிருந்தும் பெற்ற இன்னிசையைத் தமிழ் இசையாக மாற்றிய
பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள். எனவே தமிழருக்கே உரிய
தமிழ் இசை என்பது, இயற்கையிலிருந்து பிறந்தது என்கிறார் பாரதிதாசன்.

காட்சி

    பழந்தமிழ் மக்கள் அந்நாள்
    பறவைகள் விலங்கு வண்டு
    தழை மூங்கில் இசைத்ததைத் தாம்
    தழுவியே இசைத்த தாலே
    எழும் இசைத்தமிழே.
(அழகின் சிரிப்பு: 57)

இயற்கையிலிருந்து பெறப்பட்ட இந்தத் தமிழ் இசை, தனிச்சிறப்பு
வாய்ந்தது. இசையமுதில் தமிழன் வாழ்ந்த இன்ப வாழ்வின்
அடையாளம் இசைத்தமிழே என்கிறார். இதனைக்

    குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு
    கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை
(இசையமுது. எந்த நாள்: 9-10)

என்று குறிப்பிடுகிறார். இசைத்தமிழ் தமிழர்களின் குறைவில்லாத
செல்வம்.; தமிழர்கள் நெஞ்சில் நிறைந்த செல்வம்.

1.2.3 தமிழரின் வீரம்
பண்டைத் தமிழர்கள் வீரத்தின் சிறப்பினைப் புறநானூறு போன்ற
பழைய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. அந்த வீரப்
பாரம்பரியப் பெருமையைத் தமது தமிழ் உணர்வு வெளிப்படுமாறு
எடுத்துரைக்கிறார் பாரதிதாசன்.

    செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங்கள் போல்
    திறலழித்துவிட எவரும் பிறந்தாரில்லை.
(தமிழச்சியின் கத்தி, அத்தான் என்று எதிர் வந்தாள்:1-2)

தம் பழம் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் தமிழர்கள்.
தமிழர்களின் வீரம் சிங்கம் போல் ஆற்றல் வாய்ந்தது; அந்த
ஆற்றலை அழிப்பது எளிதல்ல என்று கூறுகிறார் பாரதிதாசன்.

• இமயத்தில் தமிழ்க் கொடி
பண்டைத் தமிழ் மன்னர் ஒருவர், வடநாடு சென்று போரிட்டு,
வெற்றி பெற்று, தன் வெற்றிக்கு அடையாளமாக இமயமலையின்
மேல், தன் நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த வீர
வரலாற்று நிகழ்ச்சியை நினைவூட்டி “நாம் தமிழர்” என்று
சொல்வதில் எத்தகைய பெருமிதம் கொள்கிறார், பாரதிதாசன்!


    இமய வெற்பின் முடியிற் - கொடியை
    ஏறவைத்த நாங்கள் தமிழர் என்று சொல்வோம்.
(இரண்டாம் தொகுதி - 39. பகை நடுக்கம். வரிகள்: 2 - 4)

இவ்வாறு, தமிழர்களிடமுள்ள வீரத்தின் சிறப்பினைப் பல பாடல்கள்
மூலம் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.

1.2.4 தமிழரின் கடமைகள்
தாய்மொழியாம் தமிழ் வளம் பெற்றால்தான், தமிழன் வளம்
பெறுவான். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழன் வாழ்வான் என்ற
நம்பிக்கை பாரதிதாசனுக்கு இருக்கிறது. எனவே, தமிழுயர்ந்தால்
தான் தமிழன் உயர்வான், தமிழ்ப் பகைவனும் தானே மறைவான்
என்று குறிப்பிடுகிறார். தமிழை வளப்படுத்த என்ன வழி? அது
எவ்வாறு வாழும்? தமிழ் எங்கும் நீக்கம் அற நிலைத்து நிற்க
வேண்டும்; அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். கலைச்
செல்வங்கள் யாவும் தமிழாய் நிலைக்க வேண்டும் என்று
குறிப்பிடுகிறார் பாரதிதாசன். எனவே

    நன்று தமிழ் வளர்க ! தமிழ்
    நாட்டினில் எங்கணும் பல்குக ! பல்குக
    என்றும் தமிழ் வளர்க - கலை
    யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக !
(முதல்தொகுதி - 21.
தமிழ் உணவு 8-வது பாடல், வரிகள் 3 - 6)

என்று வேண்டுகிறார் கவிஞர்.

• தமிழும் தமிழரும்
தமிழ் வாழ்ந்தால் தமிழர்கள் வாழ்வார்கள் என்று கருதிய
பாரதிதாசன், தமிழையும் தமிழரையும் பிரிக்க முடியாது என்று
உணர்ந்தார். எனவே,

    தமிழ்மொழி வாழ்க !
    தமிழர் வாழ்க !
(இளைஞர் இலக்கியம், வாழ்க வரிகள்: 1 - 2)

என வாழ்த்துகிறார். தான் பெற்ற தமிழ் உணர்வைத் தமிழர்கள்
எல்லாம் பெற்று, தாய் மொழியாம் தமிழைப் பேணிப் பாதுகாத்து
வளர்க்க வேண்டும் என்று விரும்பினார் பாரதிதாசன்.

1.2.5 தமிழர் ஒற்றுமை
தமிழ்வாழ, தமிழர் வாழ. தமிழர்களிடையே ஒற்றுமை மிக
அவசியம் என எண்ணினார் பாரதிதாசன். எனவே, தமிழர்களின்
ஒற்றுமையைப் பற்றிப் பல பாடல்கள் பாடினார்.
தமிழர்கள் தங்களுக்குள் வேற்றுமை பல கொண்டுள்ளனர்.
அவ்வேற்றுமையை ஒழிக்க வேண்டும். அதற்கு என்ன வழி?
தமிழால் - செந்தமிழால் ஒன்றுபட வேண்டும். தமிழ் - தமிழர்
என்ற உணர்வு ஏற்பட வேண்டும். இதனைச்,

    செந்தமிழ் ஒன்றே
    நல்லொற்றுமை சேர்க்கும் ; நன்னெறி சேர்க்கும்

என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழர் ஒற்றுமையாய் வாழ்ந்தால்
என்ன நிகழும் என்பதையும் சுட்டுகிறார்.
தமிழுக்குப் பகையாக இருப்போர் எல்லாம், தமிழர்களிடையே
காணப்படுகின்ற ஒற்றுமையைப் பார்த்து ஓடி ஒளிந்து கொள்வார்கள்
என்று கூறுகிறார் பாரதிதாசன். ஒற்றுமையால் ஏற்படும் நன்மையைக்
கூறும்போது,

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
(தேனருவி - செந்தமிழ்ச் செல்வம், வரிகள்: 4 - 5)

என்று குறிப்பிடுகிறார்.

• உடல் பல உயிர் ஒன்று
தமிழ் உணர்வால் ஒன்றுபட்ட தமிழர்கள், உடலளவில் பலராக
வாழ்ந்தாலும், உயிரளவில் ஒருவரே இதனை,

    வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
    வீரம்கொள் கூட்டம் அன்னார்
    உள்ளத்தால் ஒருவரே மற்று
    உடலினால் பலராய்க் காண்பார்.
(முதல்தொகுதி. எந்நாளோ? 5-வது
பாடல், வரிகள்: முதல் 4 வரிகள்)

என்ற பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். இங்கு ‘வெள்ளம்போல்
தமிழர் கூட்டம்’ என்று ஓர் அருமையான உவமையைக்
கையாளுகிறார். வெள்ளம் ஒன்று திரளும். பிரிந்தாலும் மீண்டும்
கூடும். குறுக்கே பிளந்தாலும் ஒன்று சேரும். தமிழர்களின்
ஒற்றுமை அவ்வாறு தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்
தமிழர் ஒற்றுமை நிலைக்கும். தமிழும் தமிழரும் தரும் பெருமையும்
மேலும் மேலும் வளரும்; வாழும் என்று நம்பினார் பாரதிதாசன்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...