Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Wednesday, May 4, 2011

மீட்டலுக்கான சிறந்த வழி எது?



•    ஓவ்வொரு மாணவர்களும்;,வெவ்வேறு வழிகளைக் கையாளுவர். ஆனால் சிறந்த வழி எதுவெனில், மீட்டலுக்கான சிறந்த திட்டத்தை தீட்டுவதாகும்.
•   
பரிட்சைக்கு எவ்வளவு காலம் உள்ளது என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு கால அட்டவணையை தயாரியுங்கள்.
•   
ஓவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு காலம் வேண்டும் என்பதை கணக்கிடுங்கள். அதன் போது நீங்கள் குறைவாக உள்ள பாடத்தை கவனத்தில் எடுங்கள். நீங்கள் நன்றாக செய்யும் பாடத்தையும் முக்கியமாக கணக்கில் எடுக்க மறக்காதீர்கள்.
மீட்டலுக்கான திட்டத்தை தயாரித்து விட்டீர்களா, அடுத்து?
•    கண்டிப்பாக இருங்கள். அப்போதுதான் எதை பூர்த்தி செய்தீர்கள் என்றும் எதை தவற விட்டீர்கள் என்றும் உங்களுக்கு தெரியவரும்.
•   
உங்கள் இல்லத்தில் எங்கிருந்து மீட்டல்களை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்பதை திட்டமிடுங்கள்.
•   
உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு அறிவுரையை வழங்குங்கள். படிக்கும் நேரத்தில் வீட்டில் அமைதியை பேணுமாறு.
•   
ஓவ்வொரு பாடத்திற்கும் இடையில் இடைவெளி விடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சலிப்பு ஏற்படாது.
•   
உங்கள் பாட குறிப்புகளுக்கான புதிய மூலங்களை தேடுங்கள். உதாரணமாக, இணையம். இதனால் உங்களுக்கு புதிய குறிப்புகள் கிடைக்கலாம்.
•   
குறிப்பிட்ட மீட்டலை பூர்த்தி செய்த பின், உங்களுக்கு ஒரு சிறிய பரிட்சை வழங்குவதாக தீர்மானித்துக்  கொள்ளுங்கள். அதற்காக ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டாம். அது உங்களுக்கு ஒரு தெம்பாக அமையட்டும்.
•   
மீட்டலில் முக்கியமான பகுதியாதெனில், பாடங்களை மனனம் செய்வதை விட அந்த பாடத்தை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்
பரீட்சை நெருங்கும் போது எவற்றை பின்பற்ற வேண்டும்?
•    இறுதி நேர மீட்டலை தவிருங்கள்.
•   
உங்கள் மீட்டலுக்கான திட்டத்தை நேரத்துடன் பூர்த்தி செய்யுங்கள். மிகுதியாகவுள்ள நாட்களுக்கு ஓய்வு எடுங்கள்.
•   
இவ்வாறான நேரத்தில் பரீட்சையில் சித்தியடைவதையோ தோல்வியடைவதையோ பற்றிய சிந்திக்க வேண்டாம். உங்கள் மீட்டல் திட்டம் சரியா இருந்தால், நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். கேள்விகளுக்கான பதில்கள் தானாகவே வரும்.
•   
பரீட்சைக்கு முன்பு உங்களை நீங்களே குறிப்பிட்ட கேள்விகளில் பரிசோதித்து பார்க்காதீர்கள். இறுதியாக பரீட்சையில் அமரும் போது, அவசரம் வேண்டாம். பரீட்சை வினாத்தாள் முழுவதையும் வாசியுங்கள்.
•   
நீங்கள் பரீட்சையில் சித்தியடைந்து விட்டீர்கள். பரீட்சையில் தோற்றால் நீங்கள் வாழ்க்கையிலும் தோல்வியடைந்து விட்டீர்கள் என்பது அர்த்தமல்ல. நீங்கள் பரீட்சையில் தோல்வியடைந்தமைக்கான காரணம் குறிப்பிட்ட பாடத்தில் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்பதாகும்.

பரீட்சார்த்திகள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சனைகள்
•    மீட்டலை பிற்போடல். இறுதி நேரம் வரை காத்திருத்தல் மற்றும் பிற்போட்டமைக்கு காரணம் தேடல். உண்மையாதெனில், நாட்கள் செல்லச் செல்ல பயமும், பரபரப்பும் தான் ஏற்படும்.
•   
மீட்டலுக்கான திட்டத்தை சரியாக தயாரிக்காவிட்டால் மாணவர்களுக்கு அவர்களின் பெறுபேறு குறித்து கவலை ஏற்படும்.
•   
சிலர் அவர்களில் பெற்றோர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கிவிடுவார்கள். உங்கள் பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு தெளிவு ஏற்படும்.
•   
சிலசமயங்களில் உங்களைச் சூழ்ந்து மீட்டல் மற்றும் பரீட்சை தொடர்பான பாரிய பிரச்சனைகள் காணப்படுமாயின், மீட்டலின் போது பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பரீட்சை தொடர்பான மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது?
•    பரீட்சைக்கு பயப்படுவதை தவிருங்கள். அதை நேர்முகமாக பார்க்க பழகிக்கொள்ளுங்கள்.
•   
மன அழுத்தத்தை இனங்காண பழகிக்கொள்ளுங்கள். அத்துடன் அதற்கான காரணத்தையும் கண்டறியுங்கள். அப்போது ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு யாருடன் பேசினால் உங்கள் மனவழுத்தம் குறையும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ அவருடன் பேசுங்கள்.
•   
உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் வித்தியாசமான வழியை தேர்ந்தெடுத்திருப்பார்கள். நீங்கள் தெரிவு செய்த மீட்டலுக்கான வழி உங்களுக்கு ஏற்றதா என பாருங்கள்.
•   
பரீட்சை நேரம் பரபரப்பாக இருக்கும் போது சுவாசிப்பதற்க சிலருக்கு கடினமாக இருக்கும் அப்போது சற்று ஓய்வாக இருந்து உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
•   
மீள்பார்வையை தெளிவுபடுத்துங்கள்.
•   
பரீட்சைக்குப் பின்பு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். இப்பொழுது கடினமாக இருந்தாலும் அது இறதிவரை தொடராது.

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...