உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், உறுப்பு மண்டலங்களும் சீராக இயங்கும் நிலையினைத்தான் உடல் நலம் என்கிறோம். சீராக இயங்க வேண்டிய உறுப்பு மண்டலங்கள் பத்தென்று அறிந்தோம். அதில் நம் அங்கங்கள் சீராக உள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் பல பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறார்கள். அவற்றுள் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். இந்த இதழில் மாரடைப்பின் அறிகுறிகளாவன என்பதிலிருந்து இரத்த சர்க்கரை, இதய செயல்பாடு, இரத்தத்தில் கொழுப்புச் சத்தின் அளவு குறித்து பார்ப்போம்.
மாரடைப்பின் அறிகுறிகளாவன
அ) இடது பக்க நெஞ்சுவலி
ஆ) நெஞ்சிலிருந்து இடது தோளுக்குப் பரவும் வலி.
இ) நெஞ்சிலிருந்து இடது கைக்குப் பரவும் வலி.
ஈ) அதிகபட்ச வியர்வையுடன் கூடிய படபடப்பு.
உ) மயக்கம்
ஆ) நெஞ்சிலிருந்து இடது தோளுக்குப் பரவும் வலி.
இ) நெஞ்சிலிருந்து இடது கைக்குப் பரவும் வலி.
ஈ) அதிகபட்ச வியர்வையுடன் கூடிய படபடப்பு.
உ) மயக்கம்
இவ்வறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்ப்பது அவசியமாகும்.
இரத்த சர்க்கரை (Blood Sugar)
நாம் உணவு உண்பதற்கு முன்னால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 70 முதல் 110 மி.கி./ டி.லி என்றஅளவுக்குள் இருக்க வேண்டும். அதிகமாவதும், குறைவதும் ஆபத்தானது.
இரத்தத்தில் சர்க்கரையானது குளுக் கோஸ் என்றநிலையில் உள்ளது. இரத்தத் தில் போதுமான குளுக்கோஸ் இருத்தல் மிகவும் அவசியமாகும். சாதாரண நிலையில் நமது மூளைக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது. இரத்தம் குளுக்கோஸை எடுத்துச் சென்று மூளைக்குத் தருகிறது. நாம் உடற்பயிற்சி செய்யாத போது இரத்தத்தில் உள்ள 66 சதவீத குளுக்கோஸ் மூளைக்குச் செல்கிறது. மீதியுள்ள குளுக்கோஸ் தசைகளுக்குச் செல்கிறது. ஆனால், நாம் உடற்பயிற்சி செய்யும் போது தசைகளுக்கு குளுக்கோஸ் அதிகம் தேவைப்படுகிறது. இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால் மூளைக்குச் செல்லக்கூடிய குளுக்கோஸின் அளவும் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது.
தேவைக்கு அதிகமாக சர்க்கரை உட்கொள்ளும்போது உட்கொண்ட சர்க்கரையை ஜீரணிக்க அதிக அளவில் இன்சுலின் (Insulin) தேவைப்படுகிறது. அதற்கு இன்சுலினைச் சுரக்கும் கணயம் திணறும். இருப்பினும் இன்சுலினை தேவைக்கு அதிகமாகச் சுரந்து, சர்க்கரையை முற்றிலுமாக ஜீரணித்து விடுகிறது. இப்போது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதையே Hypoglycemia என்கிறோம். இந்நிலையில்தான் மயக்கம் கூட ஏற்படுகிறது. மந்தமாக மனிதர்கள் உணர்கிறார்கள்.
தொடர்ந்து பல ஆண்டுகள் சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால், போது மான அளவு இன்சுலினைச் சுரக்கும் திறனை கணயம் இழந்துவிடுகிறது. இதனால் உடலில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்சுலின் பற்றாக்குறை ஆனதுமே, இரத்தத் தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடுகிறது. இப்போது இரத்தத்தில் மிக அதிக அளவில் குளுக்கோஸ் இருப்பதால், அதை ஜீரணிக்க இன்சுலின் இல்லாமல் போவதாலும், உடலில் குளுக்கோஸை செல்களுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போய்விடுகிறது (இன்சுலின்தான் குளுக்கோஸை செல்களுக்கு எடுத்துச் செல்வது). இதனால் செல்கள் செயலிழந்து விடுகின்றன. இதைத்தான் சர்க்கரை வியாதி (Diabetics) என்கிறோம். எல்லா அவயங்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் உடலில் எல்லா அவயங்களுக்கும் குளுக்கோஸ் கிடைக்க இன்சுலினை ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டியுள்ளது.
அதிகம் சர்க்கரை உண்பவர்கள் ஏன் பருமன் ஆகிறார்கள்?
இளமையாக தசைப்பிடிப்புடன் இருப்பவர்களின் செல்கள் நீளமாகவும், நேர்த்தி யாகவும் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த, ஓரளவுக்கு அதிக எடையுடன் இருப்பவர்களின் செல்கள் தடிப்பாகவும், நேர்த்தி இல்லாமலும் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்துடன் ஒல்லியாக இருக்கும் நபர்களின் செல்களுக்குள் இன்சுலின் என்னும் ஹார்மோன் எளிதில் குளுக்கோஸை எடுத்துச் செல்கிறது. ஆனால் உடல் எடை அதிகமானவர்களின் உடலிலுள்ள செல்களின் சுவர் கொழுப்பின் மூலம் தடித்து இருப்பதால், குளுக்கோஸ் உள்ளே நுழைய முடிவதில்லை. எனவே, இரத்தத்தில் மிதந்து கிடக்கும் குளுக்கோஸை இன்சுலின் கொழுப்பு செல்களில் எடுத்துச் செல்கிறது. அங்கு குளுக்கோஸ் என்பது கிளைக்கோஜன் ஆக மாற்றப்பட்டு, மூன்று கொழுப்பு மூலக்கூறுகளுடன் சேர்ந்து Triglyceride என்னும் கொழுப்பு செல்லாக மாறுகிறது. இந்த கொழுப்பு செல்லில் 85% கொழுப்பு அடங்கியுள்ளது. நமது உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புக்கு அடிப்படைக் காரணம் நாம் அதிகம் உண்ட சர்க்கரைதான். நல்ல உடல்நலத்தின் எதிரி சர்க்கரை அன்றி வேறில்லை.
எனவே, உடலில் கொழுப்புச் செல்கள் பெருகாமல் இருக்க இரண்டு நிபந்தனைகள், ஒன்று, உடலில் உள்ள தசைகளை நீளமாகவும், மெல்லியதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இரண்டு செல்களுக்கு இடையே உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்க அனுமதிக்கக்கூடாது. அப்போது தான் குளுக்கோஸை இன்சுலின் செல்லுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதற்கு உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
இரண்டாவது, உடலில் ‘இன்சுலின்’ சுரக்கும் திறனைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதாவது சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டும். இதற்கு தேவைக்கு அதிகமாக சர்க்கரை உண்பதை நிறுத்திவிட வேண்டும். அரிசி, கோதுமை, ராகி போன்ற தானியங்களிலும் உருளைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, பீட்ரூட் போன்றகிழங்கு வகைகளிலும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருக்கின்றன. அதனுடன் இந்த உணவு வகைகளில் குறைந்த பட்ச புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் களும் உள்ளன. எனவே, நமது உடலின் குளுக்கோஸ் தேவைக்கு இந்த உணவுகளை முதன்மை உணவாக (Staple Food) உட் கொள்ளலாம். அதிலும் தீட்டப்படாத (Unpolished) அரிசி மற்றும் முழுக்கோதுமை (Whole Wheat) நல்ல சத்துள்ள உணவாகும். ஆனால், சர்க்கரையில் வெறும் சுக்ரோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டும் தான் இருக்கிறது. இது இரத்தத்தில் உடனே சேர்ந்துவிடுகிறது. இது உடலுக்கு நன்மையைத் தரும் கார்போஹைட்ரேட் இல்லை. எனவே, சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.
கார்போஹைட்ரேட், சர்க்கரை, குளுக் கோஸ் என்ற மூன்று வார்த்தைகள் குழப்பம் ஏற்படுத்தக்கூடும். நாம் உண்ணும் உணவான அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், உடலில் சர்க்கரையாக மாற்றப்பட்டு பின்னர் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பணியை ஜீரண மண்டலம் செய்கிறது. இரத்தத்தின் மூலம் குளுக்கோஸ் செல்களுக்கு செலுத்தப்படுகிறது. செல்கள் சக்தியைப் பெறஇந்த குளுக்கோஸை பைருவிக் அமிலமாக மாற்றி பின்னர் கார்பன்-டை-ஆக்சைடாகவும் நீராகவும் மாற்றுகிறது. அப்போது வெளியேறும் சக்தியின் உதவியால்தான் செல்களும், தசைகளும் வேலை செய்கின்றன. செல்களில் நடக்கும் இந்த செயலைத்தான் எரிதல் (Burning) என்கிறோம்.
இதய செயல்பாடு (Functioning of Heart)
ஒருவருக்கு நெஞ்சுவலி, மார்பு பட படப்பு, மூச்சு வாங்குதல் திடீரென்று வியர்த்துக் கொட்டுதல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவர்கள் உடனே உஇஎ எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதயத்தில் இருக்கும் தசைகளில் அல்லது இதய செயல்பாட்டில் ஏற்படும் குறையின் காரணமாக இந்த அறிகுறிகள் வந்திருக்கக்கூடும் என்றசந்தேகத்தின் பெயரிலேயே இந்தப் பரிசோதனையைச் செய்யச் சொல்கிறார்கள்.
உஇஎ என்பது Electro Cardio எழ்ஹம் என்றவார்த்தைகளின் சுருக்கம் ஆகும். இது இதயத்தின் இயக்கத்தையும், பணியினையும், செயல் இழப்புகளையும், வால்வுகளின் பணியினையும், குறைபாடுகளையும் அறிய உதவும் ஒரு பரிசோதனையாகும். இச்சோதனை இதயத்தின் செயல்பாட்டை காகிதத்தின் மீது வரையப்பட்ட சங்கிலித்தொடர் போன்றகோடு மூலம் வெளிப்படுத்தும். இந்தக் கோட்டினைச் சோதிக்கும் மருத்துவர் கீழ்க்கண்ட நோய்களைக் கண்டறிகிறார்.
அ) மாரடைப்பு
ஆ) இரத்தத் துடிப்பின் அளவு மற்றும் தன்மை
இ) இதய வால்வுகளின் குறைபாடுகள்
ஈ) அபரிதமான இரத்த ஓட்டம்
மொத்தத்தில் இந்த உஇஎ பரிசோதனை மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment