Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Friday, January 28, 2011

ஒரு சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே


குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்என்பர்.  இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள்இலட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர் இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து மாணவர்களை சீரிய வழியில் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் பங்கு விசாலமானவை. தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் ஆசிரியர்களின் மனதில் தோன்றும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.  தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள் என்றாலும் மிகையாகாது.

மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்னஇதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும்….  இதை சரியாக வழங்கி விட்டால் அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.
தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.
பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம். தமிழ் சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை, நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தம்மை, தாம் முதலில் உணர வேண்டும். ஆசிரியசேவை மனதால் உணரப்பட வேண்டியது. ஏதோ விடுமுறைகள் நிறைந்த இலகுவான தொழில் என்று எண்ணாமல் தியாக உணர்வுடன் செய்யப்பட வேண்டிய சேவை என்பதை புரிந்து கொள்வது இன்றியமையாதது. ஆசிரியர்களான நாம் எப்போதும் எம்மை திருத்திக் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும். மாற்றமே ஆசிரியரின் செயற்பாட்டு ரீதியான அடிப்படை வளர்ச்சியாகும். நாம் எதை செயற்படுத்த விரும்புகிறோமோ அதை முதலில் நாம் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்துகாட்ட வேண்டும்.
ஆசிரியர்களின் வார்த்தைகளையும், வர்ணிப்புகளையும் மாணவர்கள் கவனிப்பதை விட அவர்களின் நடத்தை, முக பாவம் என்பவற்றையே மாணவர்கள் முழுமையாக கிரகிக்கிறார்கள்.
ஆசிரியரின் நடத்தை தான் மாணவர்களின் நடத்தை ரீதியான மாற்றத்திற்கு முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கைக் கற்றலில் மாணவர்கள் 80% ஆசிரியர்களின் நடத்தை, செயற்பாட்டில் கற்றுக் கொள்கின்றனர். புத்தகக் கல்வி மட்டுமல்ல கல்வி சிறந்த பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், சமூக தொடர்புகள் போன்ற அத்தனை துறைகளிலும் மாணவர்களை வழிகாட்ட வேண்டும். இங்கே ஆசான் பல்துறை வல்லுவனாக இருத்தல் அவசியம். அப்போது தான் மாணவர்களுக்கு எம் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.
வெற்றிகரமான ஆசிரியர் எனப்படுபவர், சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறையில் சிறந்த குடும்பப் பின்னணியையும் சிறந்த உள நிலையையும் கொண்ட மாணவனுக்கு கற்பித்து அம் மாணவனை முன்னேற்றுவதல்ல. மாறாக தான் கற்பிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பற்றி சகல விடயங்களையும் அறிந்து, பொருத்தமற்ற சுழலில், கல்வியறிவு குறைந்த பின்னணியில் இருந்து வரும் மாணவனை வளப்படுத்துவதே வினைத்திறன் மிகு ஆசிரியருக்கு வேண்டியது. இதுவே ஓர் ஆசானின் வெற்றியும், பெருமையுமாகும்.
நவீன காலத்தில் ஆசிரியர் தொழில் பணத்துடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். குறிப்பாக இக்கால கட்டத்தில் பணத்தை மையமாகக் கொண்டு கல்வி விலைபேசப்படுகின்றது. இந்நிலை எதிர்காலத்தில் பெரும் சாபக்கேட்டை உருவாக்கலாம். பணத்தை சேகரிப் பதற்கான கல்வியை மட்டும் வழங்காது நல்ல பண்பாட்டு ரீதியான, ஒழுக்க விழுமியங்களை நிலை நாட்டும் நிறை கல்வியை ஆசிரியர்கள் வழங்குவது காலத்தின் தேவையாகும்.
ஆசிரியர் தொழில் புனிதத்துவம் மிக்கவை. தெய்வீகமானவை. எனவே, இத்தொழில் மகத்மீகத்தை உணர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் செயற்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். ஏற்னகவே குறிப்பிட்டதைப்போல் ஒரு குடத்துப் பாலுக்கு ஒரு துளி விசமாகஆசிரியர்கள் மாறுவதும் தவிர்க்கப்பட வேண்டும். இத்தினத்தில் இது குறித்து திடசங்கற்பம் பூணுவோமாக!

Post Comment

Thursday, January 27, 2011

ஆசிரியத்துவத்தின் வகிபங்கும், மாணவர்களின் உள நெருக்கீடும்



If you have a lemon, Make a Lemonade” என்பது மொழி. அதாவது தங்களிடம் ஓர் எழுமிச்சம் பழம் இருப்பினும் அதிலிருந்து எழுமிச்சம்சாறு செய்யலாம் எனும் நம்பிக்கை, அவ்வாறு தொடங்கினால்தான் பின்னர் தோடம்பழச்சாறு பற்றியோ அல்லது பெரிய தொழிற்சாலை பற்றியோ சிந்திக்க முடியும் என்பது பொருள்.
இவ்வாறுதான் ஒவ்வொரு மாணவனின் கற்றவும் நம்பிக்கை சார்ந்தே அடித்தளமிடப்படுகின்றது. இந்த வகையில் இன்றைய நிலையில் பாடசாலைகள், பத்திரிகைகள், கல்வியியல் அமைப்புக்கள், நிறுவனங்கள், சஞ்சிகைகள், போன்றன இதற்கான உந்துதல்களையும், உறுதுனையையும், பலமான நம்பிக்கையினையும் வழங்குவதில் பாரிய முயற்சி காட்டி வருகின்றது.
உலக மாற்றங்களுக்கு ஏற்ப இயைந்து கொடுக்கக் கூடிய வகையில் கற்றல் - கற்பித்தலில் புதுப்புது திறன் விருத்திகள், கல்வியியல் முறையில் விசேட சீர்திருத்தங்கள் போன்றன உள்வாங்கப்பட்டு இயக்கத்திறன், ஆக்கத்திறன் அதிகரித்து வருகின்றமை நோக்கியறியத்தக்கது.
“இன்றைய சிறார்கள் நாளைய தலைமைகள்” என்ற ரீதியில் மாணவர் சமூதாயத்திளை கல்வி அறிவில் முன்னேற்றுதல் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய ஆளுமையும் திறனும் கொண்டவர்களாக உருவாக்குதல், அவர்களை முழு மனிதனாக்குதல் பணிகளில் பாடசாலையானது மிகப் பெரிய வகியங்கினைக் காத்து வருகின்றது.
ஒருவனை மனிதப்பண்பாடுடையவனாக மாற்றும் வகையில் கல்வியானது “குழந்தைகளிடம் இருந்து முழு மனிதனை வெளிக் கொணர்ந்து திறன் விருத்தியின் ஆளுமையை வளர்க்கின்றது. இங்கு உடல், உள, அறிவு, ஆண்மா என்பன ஒன்றினைந்து விருத்தி செய்யப்பட்டு வெற்றி கொள்ளப்படுகின்றது”. இதனால் கல்வி சிறந்த உளத்துணையுடையதாகவும் காணப்பட வேண்டியுள்ளது.

ஆசிரியர்களின் வகிபங்கு : சமூக நிறுவனங்களில் ஒன்றாகக் காணப்படும் பாடசாலையின் வகுப்பறையிலிருந்தே நற்பிறஜைகள் என்ற அந்தஸ்தினையுடையவர்களாக வளர்த்தெடுக்கப்படுகின்றனர் வகுப்பறையில் ஆசிரியர் எவ்வாறு கற்றல் கற்பித்தலினை முன்னெடுக்கின்றனர் என்பதிலேயே ஆசிரியரின் வெற்றி தங்கியுள்ளது.
“குழந்தையானது கேள்வி கேற்கும் போதுதான் மனிதன் தனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கின்றது என்பதனை உணருகின்றனர்” என Michael Block Fort என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார் அதாவது இன்றைய நிலையில் பிள்ளைகள் பல்வேறு கோணங்களில் திறன்படைத்தவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கு ஏற்றவகையில் முகங்கொடுக்கக் கூடியவர்களாக ஆசிரியர் சமூகம் தயார் படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை வெற்றி கொள்வது என்பது ஓர் இலகுவான காரியம் எனக்கூறிவிட முடியாதுள்ளது. ஓவ்வொருவரின் சிந்தனையும், செயற்பாடும், தொனியும் வெவ்வேறு குடும்பச் சூழலிலிருந்து வரும் வகையில் பரந்து பட்டதாகக் காணப்படுகின்றது.
அதாவது தரம் 1ற்குள் நுழையும் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் காலடி எடுத்துவைக்கின்றனர். சிலமாணவர்கள் இயல்பூக்கம் கொண்டவர்களாகவும், சிலர் சாதாரன நிலையில் உள்ளவராகவும், மேலும் சிலர் கூச்ச சுபாவம், அதீத அமைதி, குரும்புத்தனம், அழுகை போன்ற பல மனப்பாங்குடன் காணப்படுவர். இந்நிலையில் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அவரவர் நடத்தைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அணுகி சமநிலைப்படுத்தும் திறன் ஆசிரியரிலேயே தங்கியுள்ளது.
இன்றைய நிலையில் கல்வியில் அறிவிலி, முட்டாள், என்ற சொல் வாசகம் அகற்றப்பட்டு விட்டது அதாவது ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு வகையில் விகித அடிப்படையில் திறமை கொண்டவர்களாகக் காணப்படுவர். அவ்வகையில் சீறிய வழியில் வளர்த்தெடுப்பது ஆசிரியத்துவத்தின் முக்கியபணியாகவுள்ளது. மாணவர்களின் நிலை கருதி அவர்கள் 3 நிலைகளாக வகைபடுத்தப்படுகின்றனர்.
1. மீதிறன் கொண்டமாணவன் (Gifted Child)
2. சாதாரனமானவன் (Normal Child)
3. மெல்லக்கற்கும் மாணவன் (Back Ward Child)
வகுப்பறையில் இவ் 3 விதமான மாணவர்களும் காணப்படுவர் இம் மூவினருக்கும் வெவ்வேறுவிதமான கற்பித்தல் அணுகுமுறை என்பது வித்தியாசப்பட்டுக் காணப்படவேண்டும்.
எடுத்துக்காட்டாக – ஆசிரியர் ஓர் பாடத்தினை விளங்கப்படுத்திய பின்னர் அது தொடர்பான பயிற்சியோ, விளக்கமோ கரும்பலகையில் எழுதி முடிக்கும் முன்னே மீதிறன் கொண்ட மாணவன் எழுதிமுடித்துவிடுகின்றான். ஆனால் அதே வகுப்பறையிலுள்ள மெல்லக் கற்கும் மாணவன் பாடம் முடிவடைந்த வேளையிலும் கூட ஒரு சொல்லோடு மாத்திரமே இருந்து விடும் நிலையும் காணப்படுகின்றது. இங்கு இவ்விரு வகுப்பாரும் விசேட தேவையுடைய மாணவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே இவ்விரு சாராரினதும் நிலைகுறித்து கவனித்துச் செயற்படுவதென்பது ஆசிரியர்களிலேயே தங்கியுள்ளது. இது சீர் செய்யப்படாத விடத்தே முறைசாராக் கல்வி திட்டம் தேவைப்பாடுடையதாகக் காணப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரினாலேயே வினைத்திறன, விளைதிறன் கொண்ட சிறந்த சூழல் உருவாக்கப்படுகின்றது அதேபோன்று மாணவர் மனதிலும் ஆசிரியர் தம்மீது அக்கரை கொண்டுள்ளார். தம் எதிர்கால வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பார் என்ற நம்பிக்கையும் உணர்வும் காணப்பட வேண்டும். இதனாலேயே “ஆசிரியர்கள் ஞான விளக்குகளாவர்” என்ற கருத்தினை சோக்ரடிஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளார் அதாவது ஆசிரியர்களானவர் வெறுமனே போதிப்பவர்களாக அன்றி சகல துறைகளிலும் நின்று கற்றல் கற்பித்தல் நிபுனத்துவத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய நிலையில் கல்வி உளவியல் என்பதும் மாணவர்களின் எதிர்காலத்தினை சீராக்கும் வகையில் பல நுட்ப முறைகளை கையாளுமாறு வலியுறுத்துகின்றது அதாவது மாணவர் சமூதாயத்திற்கு முன்மாதிரியாகவும், திறமையான அணுகுமுறைகளையும் கைக்கொண்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
“ஆசிரியரானவர் உலகை விமர்சனம் செய்பவர் மட்டுமல்லாது குறைகளிலிருந்து தீர்வு வழங்கி சமூகத்தை மாற்றியமைக்கக் கூடியவர்கள்”
வெவ்வேறு நிலையினையுடைய மாணவர்களை இணங்கண்டு கொள்வதற்காக பல நுட்ப முறையினைக் கைக்கொள்ள வேண்டும் என கல்வி உளவியல் வெளியிட்டுள்ளது.
1. அவதானிப்பு முறை
2. அகநோக்கு முறை
3. வினாக் கொத்து மறை
4. தனியாள் முறை
5. புள்ளிவிபரவியல் முறை
போன்ற முறைகளை சுட்டிக்காட்டுகின்றது இவ் அவதானிப்புத் தொடர்பு மூலம் மாணவர்களை இலக்கு (Goal) நோக்கி வடிவமைக்கமுடியும் ஒரு பெற்றோரிலும் பார்க்க ஆசிரியரினாலேயே ஒரு மாணவனின் உளநிலையை கணிப்பிட்டுக் கொள்ள முடிகின்றது மேலும் ஆசிரிய மாணவ இடைத் தொடர்பு (Intereaction) என்பது மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இன்று கற்பித்தல் பணியினை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு பல ஆய்வுகளும், புதுப்புது சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு கற்றல் கற்பித்தல் புத்தாக்கம் பெறுகின்றன இந்த வகையில் ஆசிரியத்துவம் கொண்டிருக்க வேண்டிய சிறப்புத் தேர்ச்சி, நற்பண்பு பற்றி கொலம்பிய பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வின் முடிவானது வெறுமனே பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் சிறந்த ஆசிரியர்களாகக் கொள்ளப்படமாட்டார்கள் மாறாக பின்வரும் அனைத்துப் பண்புகளையும் இணைத்திருக்கும் வகையிலேயே சிறந்த ஆசானாக மாறும் வகிபாகத் திணையும் பெறமுடியும்.
1. பரந்த அறிவு
2. ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும் திறன்
3. முகமலர்ச்சி
4. கவர்ச்சிகரமான குரல்
5. நல்லபிமானம்
6. நடுநிலைமை
7. சமூக இசைவு
8. தன்னம்பிக்கை
9. பல்துறை நிபுனத்துவம்
10. சுறுசுறுப்பு
11. நேரத்திற்கு தொழில் புரிதல்
12. சரியான முடிவெடுத்தல்
13. வசீகரிக்கும் தன்மை
14. நலன் விரும்பும் மனப்பான்மை
15. தன்னலமற்ற சேவை
16. ஒத்துழைப்பு
17. மன தைரியம்
18. தலைமைத்துவம்
இவ்வாறு பல நற்பண்புகள் இணைந்தே கட்டமைக்கப்பட்டதாக ஆசிரியத்துவம் காணப்படவேண்டும் என்கிறது இவ்வாறு ஆசிரியரின் பணிகளைத் தெளிவுபடுத்துவதைப் போன்று பாடசாலைக் கல்வியிலும் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இன்றைய உலக மாற்றங்களுக்கு ஏற்ப எதிர் கொள்ளக் கூடிய வகையில் 2007ம் ஆண்டு பாடவிதான மறுசீரமைப்பில் இலங்கையின் முறைசார் பாடசாலைகளில் 5E என்ற மாதிரி முறையின் அறிமுகமும் முக்கியமானது அதாவது இதுவரை காலமும் இருந்த பாடசாலைக் கலைத்திட்டங்களால் மாணவர்களின் ஆற்றல் விருத்தி செய்யப்படவில்லை. என்பதிக்கினங்க இவ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. 5நு என்பதானது பின்வரும் வகையில் அமைந்துள்ளது.
1. ஈடுபடுத்தல் (Engagement)
2. கண்டறிதல் (Exploration)
3. விளக்கமளித்தல் (Expiation)
4. விரிவாக்கம் (Elaboration)
5. மதிப்பீடு (Evolution)
ஆசிரியர்களின் நிலை மாற்று வகிபங்கினை ஏற்றுச் செயற்பட வைப்பதானது இதன் நோக்கமாகும். தகவல்களை முன்னின்று ஒப்பிப்பவராக இல்லாமல் பல்வேறு பாத்திரங்களில் நின்று மாணவர்களை வழிப்படுத்துவதாகும் வசதியளிப்பவர், மாற்றுபவர், முகாமையாளர், ஆலோசகர், ஆய்வாரள், மாற்று முகவர், வளவாளர், உதவியளிப்பவர் பொன்ற பல வகிபங்கினைப் பெற்றுச் செயற்பட தொழிற்பட வைப்பதாகும்.
இதனால் மாணவ மனப்பாங்கு அறிவு திறன், போன்றன மூலைச்சலவை செய்யப்பட்டு வளப்படுத்தப்படுகின்றன இவ்வாறு கற்றல் கற்பித்தலில் அக்கரை கொண்டவர்களாகக் காணப்படும் ஆசிரியர்களுக்கு மற்றும்மொரு பாரிய பொறுப்பும் கடப்பாடும் இருக்கின்றது. இன்றைய கல்வியியல் நிலையில் மாணவர்களின் நடத்தைச் சீராக்கம் என்பது முக்கியம் பெறும் ஒன்றாகக்காணப்படுகின்றது. ஆயினும் இன்றைய நிலையில் ஒழுக்க விழும்மியங்கள் கடைப்பிடினக்கப்பட்டு வருகின்றனவா என்பது பெரும் குறையாகவே உள்ளது இதற்ற காரணம் இன்றைய கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மாணவன் சமூகமயமாக்கப்பட்ட விதம் மற்றும் குடும்பத்தின் சிக்கல் நிலை போன்றவாக இருக்க முடியுமாக அறியப்படுகின்றது ஆயினும் இம் நடத்தைச்சீராக்கம் பற்றி ஆய்வுக்க உற்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது அதாவது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற பல மொழியானது குறிப்பிடத்தக்கது என்னதான் கல்வியில் சிறப்பிடம் பொற்ற ஒருவராகவோ அல்லது ஆலுமையுடையவராக இருப்பினும் ஓழக்கவிலுமியம் கொண்ட ஒருவராலேயே வெற்றி கொள்ளப்படுகிறது என்பது நிதர்சனமானது இதனாலேயே அவரின் சுய கௌரவம் பாதுகாக்கப்படுகின்றது இந்த வகையில் நடத்தை சீராக்கம் ஒக்க விழுமியம் பேனல் போன்றன வகுப்பறையில் இருந்தே பயிற்றுவிக்கப்பட வேண்டிய போறுப்பு ஆசிரியத்துவத்திற்கு இருக்கின்றது.

மாணவர்களின் உள நெருக்கீடு : இன்றைய நவீன கல்வியியல் முறையானது மாணவர்களுக்கு என விசேட செயற்திட்டங்கள் நோக்கியதான கற்றல் கற்பித்தல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடையக் கூடிய ஓர் நிலையினை எட்டியுள்ளோம். இன்றைய நிலையில் பன்திறன் கொண்ட மாணவர் சமூதாயம் உருவாக்கப்பட்டு வருகின்றது என்பதில் வெளிப்பாடுகள் சான்றுபகிர்கின்றன பெருபெறுகள் அடைவுமட்டச் சான்றுதல்கள் பரிசில்கள் போன்றன இதனை வெளிக்காட்டுகின்றன
ஆயினும் இன்றைய நிலையில் உள நெருக்கீட்டிற்கும் சுமைகளுக்கும் ஆளாகக் கூடியவர்களாகக் காணப்பட்டு வருகின்றன மகிழ்சி கரமாண கற்றல் விரும்பக்கற்றல் என்பது குறைந்த நிலையிலேயே உள்ளது இதற்கு அதிகூடிய காரணம் பெற்றோர்களினாலேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.
ஆரம்பக் கல்வியில் இருந்து எழுதும் திறன், படிக்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன், பேசும் திறன் போன்ற நான்கு திறன்களும் முறைமையடையும் போதே ஒரு மாணவனானவன் அம் மொழியில் புலைமை பெற முடியும் ஒரு பிள்ளையின் சொற்கள் கூடிய விதத்தில் 2000 சொற்களாகும் வரை வாக்கியங்களை சரிவர பொருள்விளங்கி வாசிக்க முடியாது இதற்காகப் பொற்றோர் தன் பிள்ளை முன்பள்ளிக்கு சென்ற உடனே வாசிப்புப் பெற்று விடவேண்டும் என்பதில் ஐயம் கொள்வது நியாயம் இல்லை மாறாக முன்பள்ளி என்பது இயைந்து மற்றவ்ரகளோடு (சகபாடிகளோடு) இடைவினை கொள்வதும் பேச்சுத்திறனை அதிகரிக்கும் ஓர் களமாகக்காணப்படுகிறது ஒரு பிள்ளை வாசிப்பு திறனை அதிகரிப்பதிலும் முன்னமே பேச்சுத்திறன் மேலாக்கம் பெற வேண்டும் தன்னுடைய பிள்ளைகள் வேகமாக, அவசரமாக முன்னேற வேண்டும் என்பதற்காக “குருவித்தலையில் பணங்காயைச் சமத்துவது போன்று” தங்கள் பிள்ளைகளின் மனதில் சுமைகளை பரப்பி விடுகின்றனர். அவரவர் கொள்தகுதிறன் (Capcity) கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக – தரம் 5 – புலமைப்பரிசில் பரீட்சையில் தனது பிள்ளை சித்தி எய்த வேண்டும் என்பதற்காக தரம் - 3லிருந்து விசேட பாடத்திட்டம் என்றும் மாணவர்களை பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது உதாரனம் காட்டி அவர்களின் பிள்ளை சித்திபெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தியெய்த வேண்டும் அப்படியென்றால் தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது. உதாரணம் காட்டி அவர்களின் பிள்ளை சித்தி பெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தி எய்த வேண்டும் அப்படி என்றால்தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் அதிகரித்து வருவதான அறியமுடிகின்றது.
இவ்வாறு பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானதாக அமையும் நிலையிலும் கூட அவர்களின் வயதிற்கேற்ற கல்வியின் வளர்ச்சியினைப் பெறுவதற்கும் அவர்களின் உளவிரத்தியினை மேற்கொள்வதற்கும் ஒவ்வோர் பெற்றோரும் பங்களிப்புச் செய்ய வேண்டிய தேவையுடையவர்களாக இன்றைய மாணவர்கள் காணப்படுகின்றனர்.
உளவிருத்தியினை ஏற்படுத்தும் ஆன்மீகக் கல்வியின் முக்கியத்துவம் இன்று பெற்றோர்களால் 2ம் தரமாகவே நோக்கப்படுகின்றது. மாணவர்களின் சிந்தனை விருத்தி நினைவாற்றலினை அதிகரிக்கும் ஓர் முக்கிய நற்பயன் ஆன்மீகக் கல்விக்கு உண்டு என்பதையும் அது உள அமைதியினை ஏற்படுத்துகின்றது என்பதனையும் பெற்றோர்கள் சிந்திக்கத் தவருகின்றனர். இவ்வாறு ஓய்வின்றி பிள்ளையின் மனதினைக் கணமாக்கும் பெற்றோர்கள் குழந்தையின் உள விரத்தி என்பது குழந்தை முதலே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையை உணர வேண்டும்.
உதாரணத்திற்கு ஓர் மாணவனை அனுகும் சமயம் தனது பெற்றோர் என்பவர் ஓர் ஓய்வு என்ற நிலையினை தங்களுக்குத் தரத்தவருகின்றனர் என்ற கூற்று தரப்படும் நிலையினை அறியமுடியும். இவ்வாறு இன்று உளரீதியான தாக்கம் மிருந்த நிலையில் உள்ளது.
இவ்வாறு ஆர்வம் காட்டும் பொற்றோர் பிட்பட்ட காலங்களின் பிள்ளைகள் மீதான கண்காணிப்பினையும் கரிசனையினையும் காட்டத்தவருகின்றனர். ஆனால் பெற்றோர் தனது பிள்ளையில் அனைத்து வயதுப்பருவங்களிலும் அக்கரை காட்டக் கூடியவர்களாகவும் ஊக்கமூட்டக் கூடியவர்களாகவும் காணப்பட வேண்டும். இதனாலேயே “பெற்றோர்கள் பிள்ளைகளின் நிரந்தர ஆசிரியர்கள் அவர்களுக்கு ஓய்வு என்பது கிடையவே கிடையாது” என்ற கூற்று நினைவுறுத்தப்படுகின்றது.
அத்தோடு ஓர் பிள்ளையின் குடும்பச் சூழலும் உளநெருக்கீடாக அமைவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதாவது இன்றைய நிலையில் குழந்தையானது புத்திமதிகளைக் கேட்டு நடப்பதை விட பெற்றோர்களின் நடத்தைகளைச் சுலபமாக பின்பற்றக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். இந்த வகையில் தாய் தந்தையர்களுக்கிடையிலான பழக்கவழக்கங்கள் பிள்ளையில் பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. திய நடத்தைகளும் அமைதியும் அற்ற குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் உளநெருக்கீட்டிற்கு உற்பட்டவர்களாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் பெற்றோர் பிள்ளையின் மீது திணிக்கும் செயல்ப்பண்பும் அவர்களின் உள நெருக்கடியினைத் தூண்டுவதாகவும் உள்ளது. அத்தோடு மாணவர்கள் சகபாடிகள் சம வயதுக்குழுக்கள் விளையாட்டுக் குழுக்கள் போன்றவற்றினூடாகவும் உள நெருக்கீட்டிற்கு உள்ளாக்கப்படுவதனை இன்று அவதானிக்கக் கூடிய நிலையில் உள்ளது.

இவ்வாறு பெற்றோர்கள் சமவயதுக்குழுக்கள் சூழல் போன்றவற்றினால் உள நெருக்கீட்டிற்குள்ளாகும் அதே சமயம் ஆசிரியச் சமூகத்தினாலும் உளநெருக்கீடு மாணவர்களுக்கு ஏற்படுகின்றது. அதாவது பின்தங்கிய பிரதேச மற்றும் எல்லைப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியரின் கவலயீனமும் அப் பாடசாலை மாணவர்களின் உள்ளங்களில் ஓர் விருத்தியினைப் பெறமுடியாத நிலையில் உள்ளது. அதாவது அதிக விடுமுறை மற்றும் நேரத்திற்கு தொழில் புரியாமை குறைந்த நேரக்கற்கை போன்றனவும் மாணவர்களில் பிரதிபலிக்கக் கூடியதே. மேலும் தொடரான விடுமுறையடுத்து பரீட்சைகாலங்களில் மேலும் கற்பித்தலைக் கணமாக்கும் வேளையில் மாணவனினால் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம் போன்றனவும் காணப்படக்கூடியதாகவே உள்ளது. அதாவது ஒரு நிருவாகத்துறையில் பணிபுரியும் ஊழியர் ஒரு நாள் விடுமுறை என்றால் அவர் தனது பணியினை அடுத்தநாள் தொடரக் கூடியதாகவிருக்கும் ஆனால் ஓர் கற்றல் நாள் என்பது அவ்வாற நிலையில் அல்ல. என்பது சிந்தனைக் குறியதே.
இன்யை சூழலில் புதிய புதிய சீர்திருத்தங்கள் மாணவர்களுக்காக அறிமுகம் பெறும் வேளையிலும் அவை அனைத்தும் சகலரினாலும் ஏற்கப்பட்டு பன் விருத்தி வகிபங்கு மேற்கொள்ளப்பட வேண்டியதும். உள வளர்ச்சி மேன்மை பெறுவதும் தேவையை நோக்கியதே இந்த வகையில் மாணவர்களும் - ஆசிரியர்களும், மாணவர்களும் - பெற்றோர்களும், பெற்றோர்களும் - ஆசிரியர்களும் என்ற நிலையில் காணப்படும் இன்றைய கல்வியியல் முறையானது.
1. மாணவர்களின் தலைமை தாங்கும் பண்பு
2. ஒத்துழைப்பு
3. நேரிய கற்றல்
4. விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு
5. கீழ்ப்படிதல்
6. கட்டளைகளை ஏற்று நடத்தல்
7. சமநிலைத் தன்மை பேனல்
8. தோல்வியை ஏற்றுக் கொள்ளல்
9. ஒழுக்க வழுமியங்களில் ஈடுபடல்
10. இலக்குகளுக்கு வளப்படல்
11. ஊக்கமளிக்கப்பட்டிருத்தல்
போன்ற பண்பாட்டு பழக்கவழக்கங்களும் மாணவர் சமுதாயத்தில் விருத்தி செய்யப்படுகின்றது. இந்த வகையில் அறியாமை எனும் இருளை நீக்கி அறிவு எனும் ஒளியைப் பரப்புவது ஆசிரியரின் பிரதான கடமையாகின்றது. இவ்வாறு பல்வேறு கடமைகளைக் கொண்ட ஆசிரியர் சமுதாயம் பல்வேறு அறிவுப் பிரவாகத்தைக் கொண்டவர்களாக விளங்கப்பட வேண்டும் சமகால சூழ்நிலைக்கேற்ப பல்வேறு திறன்களையும் சுயநம்பிக்கையினையும் சுயமதிப்பீட்டினையும் பெற்றுக் கொள்ள தம்மைத் தாமே வளப்படுத்த வேண்டிய காலத்தின் தேவையுடையவராக ஆசிரியத்துவம் காணப்படுகின்றது. அத்தோடு மாணவர்களின் செயலாக்கத்தினை வளப்படுத்தும் வகையில் எதிர்பார்க்கப்படுவது காணக்கூடியதே.
ஆத்தோடு பெற்றோரும் தங்களது பிள்ளைகளில் சகல வகையிலும் வகனம் செலுத்தக் கூடியவர்களாகக் காணப்பட வேண்டும். ஓர் உயர்ந்த கட்டத்திற்கு அத்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதே போல ஒரு மனிதனின் குழந்தைப்பருவமும் அவனின் குடும்பச் சூழலும் பாரிய பங்களிப்பினை கொண்டுள்ளது. அத்தோடு குழந்தையின் (மாணவனின்) அமைதியான சூழல், உடல், உள, அறிவு, ஆன்மா விருத்தி கட்டுமானம் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக மாற்றுவதில் பெற்றோரின் பங்கு முழுக்க முழுக்க அமைந்து விடுகின்றது. எச்சந்தர்ப்பத்திலும் பிள்ளைகள் தம்மிலும் பிறரிலும் கொண்டுள்ள எதிர்பார்ப்பு இழக்கப்படும் போது உள நெருக்கீட்டினையும், மன உடைவு, மன அழுத்தம், பற்றற்ற நிலை போன்ற பண்பினை வளர்த்தெடுக்கின்றனர்.
இந்த வகையில் ஆசிரியர் பெற்றோர் மாணவனின் பன்விருத்தியில் பங்கு பற்றல் சிறப்பிடம் பெறவேண்டிய வகையில் செயற்படுவது சிறந்த எதிர்கால. சமுதாயப் பரம்பலுக்கு உருதுனையாக அமையக் கூடியவர்கள். எனவே கூழந்தைகளையும் மாணவர்களையும் நேரடியாக அணுகக் கூடியவர்கள் பெற்றோரும் ஆசிரியர்களுமேயாகும்.
“எனவே ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்ற நியூட்டனின் விதி இன்று மாணவர்களின் செயற்பாடுகளுக்கு ஆசிரியர் சமூகமும் பெற்றோர்களும் தாக்கத்தின் மறுதாக்கமாக அமைகின்றது என்பது உண்மையான ஒன்றேயாகும்.

என்.பீ.முகம்மது றிபாஸ்


Post Comment

Wednesday, January 26, 2011

இன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்

கல்வி
 
கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன.

இதுபோன்ற செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது.

இது கல்வியின் மேலுள்ள குற்றமா? கல்வி கற்றவர்கள் மேலுள்ள குற்றமா?

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.

தீர்வு என்ன?
தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்து விடலாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்.

நெறிசார்ந்த கல்வி
எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர் களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அரிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர் களாக நாட்டின் நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர் களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.
 

Post Comment

Kavithaigal


Post Comment

Tuesday, January 25, 2011

How The Earth Will Look Like In Future

This is the way the World may look like 50 million years from now!

Post Comment

Friday, January 14, 2011

Perak Man


Perak Man, found in 1991, is the only complete human skeleton which has been found in Malaysia. The cave which was his final resting place is called Gua Gunung Runtuh and is situated in Bukit Kepala Gajah, or Elephant’s Head Hill, in the Lenggong Valley in Ulu Perak. The skeleton has been dated at between 10,000 and 11,000 years old, which makes him a Stone Age man, from the Palaeolithic period. The skeleton was found by Datuk Prof Zuraini Majid and her team from Universiti Sains Malaysia (USM).
It is believed Perak Man was an important member of his tribe, judging by the way he was buried, in a foetal position, and accompanied by stone tools. He was about 157cm tall and probably aged 40-50 when he died. He had an atrophied left hand and one finger was deformed. As well as the skeleton, remnants of tools and food such as shells and animal bones were found in the cave.


The Lenggong valley is one of the Peninsula’s most important areas for archaeology, as excavations have revealed many traces of Malaysia’s pre-history. The town of Lenggong is situated some 100km north of Ipoh on the Kuala Kangsar-Grik road. It is the site of the oldest known place of human activity in the Peninsula. Today, it is still a rural area, with small kampungs surrounded by green vegetation and limestone hills.
Lenggong can be likened to an open-air museum, and is home to legends, skeletons, cave drawings and precious finds such as jewellery, pottery, weapons and stone tools. Gua Gunung Runtuh was probably used as a temporary camp when the people were out hunting, being well situated high up. In the same hill, other caves have yielded archaeological remains such as stone tools and food remnants, but no more skeletons. The caves were probably used as temporary shelters and seasonal camps, whereas Gua Gunung Runtuh was lived in for longer periods.
Kota Tampan is the site of a prehistoric stone tool workshop, and has been dated at about 74,000 years old. This makes it older than the archaeological remains which have been found at Niah Cave in Sarawak, where one human skull has been dated at about 40,000 years old. But all these findings are still very young compared to those from Africa, where the predecessors of the human species originated about three to five million years ago.

Post Comment

Wednesday, January 12, 2011

Bujang Valley

The Bujang Valley or Lembah Bujang is a sprawling historical complex having an area of approximately 224 square km. Situated near Merbok, Kedah, in north-west Malaysia between Gunung Jerai (Mt. Jerai) in the north and the Muda River in the south, it is the richest archaeological area in Malaysia.
Bujang ValleyThese archaeological remains indicate that there was a Hindu-Buddhist polity here. The name itself is roughly translated into Snake or Dragon Valley. The area consists of ruins that have been carbon dated to the 4th century. More than fifty ancient temples, called candi, have also been unearthed. The most impressive and well-preserved of these is located in Pengkalan Bujang, Merbok. The Bujang Valley Archaeological Museum is also located there.
Research indicates that there may have been a Hindu-Buddhist kingdom here possibly as early as 300 CE. If that were true, this would mean that local rulers may have adopted Indian cultural and political models earlier than those of Kutai in eastern Borneo, in southern Celebes or Tarumanegara in western Java, where remains showing Indian influence have been found dating from the early 5th century. Relics found in the Bujang Valley are now on display at the archaeological museum. Items include inscribed stone caskets and tablets, metal tools and ornaments, ceramics, pottery, inscriptions, Buddha Statues and Hindu icons.
Sri Vijaya EmpireFor the past two decades, students from universities around Malaysia have been invited for research and have done their graduate works at the Valley. Many of the historical links are still vague as not many writings survive. Even the temples did not survive the onslaught of the years because their wooden roofing has rotted and withered over the past 1200 years. Many of the findings from the Bujang Valley are scattered elsewhere from Museum Negara to Singapore. There are also accounts by the students that many of the religious findings have either been hidden or destroyed by the authorities.
Folk stories and oral history recount a magnificent kingdom of jewels and gold. Outside peninsular and insular Southeast Asia, there are some oral histories in India that suggest the presence of golden chariots and jewels in hidden caves at what may be the Bujang Valley and Mount Jerai. Some visitors to the antiquity department at Muzium Negara has eye-witness recollection of magnificent objects such as a 10 feet tall Raja Bersiung Throne and various idols and items from the Valley, which have now disappeared.
In Kedah there are remains showing Buddhist and Hindu influences which has been known for about a century now from the discoveries reported by Col. Low. These have recently been subjected to a fairly exhaustive investigation by Dr. Quaritch Wales. Dr. Wales investigated no fewer than thirty sites around Kedah. The results attained show that this site was the location of a Hindu-Buddhist polity similar to those found in western Indonesia.
An inscribed stone bar, rectangular in shape, bears the ye dharmma formula in Pallava script and dates from the fourth century A.D., thus proclaiming the Buddhist character of the shrine near the find-spot of which only the basement survives. It is inscribed on three faces in Pallava script of the sixth century CE, possibly earlier.
The Bujang Valley civilisation was part of the Srivijaya Empire, an ancient Malay kingdom centered on the island of Sumatra, Southeast Asia which influenced much of the Malay Archipelago. The earliest literary account of its existence dates from the 7th century; the Chinese monk, I-Tsing, wrote that he visited Srivijaya in 671 for 6 months. The first inscription in which the name Srivijaya appears also dates from the 7th century, namely the Kedukan Bukit Inscription around Palembang in Sumatra, dated 683. The kingdom ceased to exist between 1200 and 1300 due to various factors, including the expansion of the Hindu Kingdom of Majapahit. In Sanskrit, Sri means shining or radiant and Vijaya means victory or success.
Text adapted from Wikipedia (retrieved, July 5th 2009)

Post Comment

Sunday, January 9, 2011

The Fathers Of Mathematics

Arithmetic - (Aryabhatta, 476 AD)
Hindu - Arabic number system is consdered to be a universal human language, without which mathematics, science and commerce would be almost impossible.  Russian mathematician Michel Ostrogradski stated invention of the Hindu - Arabic number system is the greatest discovery after writing.  Aryabhatta worked on different place value notations and finally developed the decimal place value notation and the place holder.  This number system and mathematics went to Europe and was known as "Modus Indorum" or "method of the Indians" during the middle ages. This method of the Indians is none other than our arithmetic today. 
Plain Geometry - (Euclid, 350 BC)
 
In geometry Euclid's "elements"  is considered to be the major guide in the ancient world.   Euclid's elements was translated to Arabic and then to Latin during the renaissance.  Euclid's elements have many geometric relations and proof of them.  Euclid started with known axioms and developed the proof using them.  This method is known as axiomatic method and considered to be the crowning glory of Euclid and Greek mathematics in general.  The axiomatic method is highly venerated in modern mathematics.  All equations and relations in mathematics are proven today using the axiomatic system somewhat similar to Greek method.  Axiomatic system of Greeks is the foundation of physices, mathematics and some fields of Engineering.
Solid Geometry - (Archimedes, 250 BC)

Archimedes took plain geometry to a higher level by considering solid geometry such as cones and spheres. Archimedes is especially important for his discovery of the relation between the surface and volume of a sphere and its circumscribing cyclinder.  Archimedes also famous for his theorem on displacement of water from a solid body.  Other than solid geometry, Archimedes also worked on mechanics and hydraulics.  Methods used by Archimedes was used by Newton to develop calculus.  Mathematics of Archimedes is used for many diverse fields ranging from Engineering, Hydraulic, Mechanics and Chemical Engineering.  As per Greek historian Proclus of 4th century AD, Roman soldiers would run away when they see a rope or a lever fearing that "Archimedes has deviced another machine to kill them".  This great mathematician was killed by a Roman soldier while working on a problem on the sand.
Algebra - (Brahmagupta, 596 AD)

Brahmgaupta is known as the man who found zero, most priced discovery of mathematics.  He incorporated the zero and negative numbers to our number system which was developed by Aryabhatta.  Brahmagupta solved many different types of equations using general methods.  Prior to Brahmagupta, Greek mathematician Diophantus solved equations using special - ad hoc methods.  Brahamagupta solved  first order indeterminate equations, second order determinate (quadratic) and second order indeterminate equations and equations with multiple variables.   Al Biruni of 10th century says that Brahmgupta's Brahmasputha Siddhanta (or a simplified version of it) was translated to Arabic as Sind Hind  due to an order given by Caliph Al Mansoor in 776 AD.
Reference:  Brahmagupta Man who found zero, addition, subtraction, multiplication and division.
It is Brahmagupta who developed rules for four fundamental operations using Indian numerals, which the world is using today.  Pythogaros developed methods using Greek numbers.
Trigonometry (Aryabhatta/Ptolemy)

Our sine and cosine functions come from Aryabhatta' Ardha Jya and Kotti Jya which were translated to Arabic as Jiba.  Arab mathematicians added tangent function.  Jiba was translated to Latin as Sinus.  It is widely accepted that Aryabhatta obtained Ptolemy's full chord method and transformed it to much easier half chord method.
Calculus (Newton/Leibnniz)

Newton and Leibnitz discovered calculus at the same time period.  Newton used differential calculus to prove his methods while Liebniz used integral calculus.  Other than calculus, both worked on other fields.  Newton is specially famous for his theory on gravitation which stood for many centuries before Einstein came up with the theory of relativity. 
For further reading here

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...