ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.. கடந்த 5/5/2010 அன்று எனது முதல் பதிவை எழுதினேன்.. ஆரம்பத்தில் எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்காத ஒன்று. இன்று 10009 பேர் என் பள்ளியின் ப்லோகை பார்த்துள்ளனர் என்றால் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதுவரையில் நான் ஏறத்தால 150 பதிவுகளை எழுதியுள்ளேன். என் பதிவுகளை படித்த அணைத்த நல்வுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
எதுவுமே சரியாக எழுதத் தெரியாமல் தான் நான் இந்த பதிவுலகத்திற்கு வந்தேன். ஆனால் சக பதிவர்களின் ஊக்கம், அறிவுரை என்னை இத்தனை பதிவுகளை எழுதுவதற்கு ஊக்கம் அளித்தது . அந்த நல்வுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அது மட்டுமில்லாமல் என் முன்னாள் தலைமையாசிரியர் திரு வீரமுத்து அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்கு கொடுத்த ஊக்கம் தான் என்னை ஒரு பதிவாளராக மாற்றியது.
சில விஷயங்களை கற்றுக் கொல்வதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் மன நிறைவை கொடுக்கிறது. ஒரே ஒரு வேண்டுகோள் ! தயவு செய்து என் பதிவை படித்தவுடன் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள். ஏதும் தவறு செய்திருந்தால் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி.
1 comment:
congratulation anbarasu keep it up our next target is 100 000.i love sjkt keruh forever.
Post a Comment